கண்ணம்மா அசிங்கப்படுத்தியதால் பாண்டியிடம் அடிவாங்கி சரிந்துள்ளார் பாரதி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா பாண்டி ஆம்பள கிடையாது என ஊர் ஜனங்க முன்னாடி சொல்ல அனைவரும் பாண்டியை பார்த்து புஸ்வானம் பாண்டியன் சிரிக்க அசிங்கத்தில் பாண்டி என்னை அப்படி சொல்லாதீங்க என சத்தம் போடுகிறான்.
அதுமட்டுமல்லாமல் கண்ணம்மா அங்கிருந்த பெண்களிடம் காதில் அவனுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது நீங்க அவனை கிண்டல் பண்ணுங்க உண்மையா தானா சொல்லுவான் என சொல்ல எல்லோரும் பாண்டியை கிண்டல் செய்ய ஒரு கட்டத்தில் அவன் கண்ணம்மாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என் மூச்சு காத்து கூட அவ மேல பட்டது கிடையாது என நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அனைவரும் அவனை திட்டி காரி துப்புகின்றனர்.
பிறகு கண்ணம்மா தயவுசெய்து ஒரு பொண்ணு ஜெயிச்சா அவள பத்தி தப்பா பேசாதீங்க, என வீரவசனம் பேச அங்கிருந்தவர்கள் தலைகுனிந்து நிற்கின்றனர். பாண்டியை கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க சொல்ல பாண்டி இவர்கிட்ட நான் மன்னிப்பு கேட்கணுமா அதெல்லாம் முடியாது என சொல்கிறான்.
அதன் பிறகு பாரதி கேட்க வைக்க வேண்டிய விதத்தில் கேட்க வைக்கலாம் என சொல்லி பாண்டியுடன் குஸ்திக்கு தயாராகி சண்டை போடுகிறார்.
முதலில் அடி வாங்கும் பாரதி அதன் பிறகு பாண்டியை அடி வெளுத்து கீழே தள்ள பாண்டி மண்ணை எடுத்து பாரதியின் கண்ணில் தூவி பாரதியை அடித்து கீழே சரிய வைக்கிறான். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.