வெண்பாவுக்கு உதவ பாரதி போட்ட திட்டத்தை அறிந்த சௌந்தர்யா பாரதிக்கு செக் வைத்துள்ளார்.
Bharathi Kannamma Episode Update 12.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அகிலனும் அவருடைய அப்பாவும் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சேனலை மாற்றியபோது செய்தியில் வெண்பாவிற்கு அவர் நிரபராதி என நிரூபிக்கும் வரை மருத்துவர் வேலை செய்யக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என்ன சொல்லப் பட்டதை அடுத்து அவர் சௌந்தர்யாவை அழைத்து செய்தியில் ஓடிக் கொண்டிருப்பதை காண்பிக்கிறார்.
இந்தப் பக்கம் சாந்தி வீட்டில் அமர்ந்து கொண்டு வெண்பா ஜெயிலில் இருப்பதை எண்ணி புலம்பிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஒருவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க அவர் ரௌடியா அல்லது திருடனா என தெரியாமல் சாந்தி பயப்படுகிறார். பிறகு தன்னை வெண்பா தான் அனுப்பி வைத்துள்ளார் கண்ணம்மாவை பழி வாங்கத்தான் தன்னை அனுப்பியதாகவும் கூறுகிறார். மேலும் நான் கண்ணம்மாவின் தாய்மாமன் என சொல்கிறார்.
இந்திய ஹாக்கி அணிக்கு, தலைமை தாங்குகிறார் 21 வயது இளைஞர்
பிறகு அவரை நம்பாத சாந்தி அவர் என் வெண்பாவுக்கு போன் போட்டு கொடுத்ததும் நம்புகிறார். இந்தப் பக்கம் கண்ணம்மா விவாகரத்து பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். எக்காரணத்தைக் கொண்டும் லஷ்மிக்கு அப்பா இல்லாமல் ஆகிவிடக் கூடாது என நினைக்கிறார். இந்த நேரத்தில் லக்ஷ்மி அப்பா அப்பா என தூக்கத்தில் பேசிக் கொண்டே எழுந்து கொள்கிறார். காரில் வெளிநாட்டு சாக்லேட் உடன் அப்பா வந்ததாகவும் நான் நான் உன் அப்பா என சொன்னதும் நான் சந்தோஷத்துடன் ஓடி செல்கிறேன் ஆனால் அப்பா காரில் ஏறிச் சென்றுவிட்டார். அவருடைய முகத்தை கூட பார்க்க முடியவில்லை. கடைசி வரைக்கும் அப்பாவை பார்க்கவே முடியாதா என லஷ்மி சொல்ல உன்னுடைய அப்பாவுடன் உன்னை சேர்த்து வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என கண்ணம்மா வாக்கு கொடுக்கிறார்.
இந்த பக்கம் சௌந்தர்யா அகிலன் மற்றும் அவருடைய ஆத்மா அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பாரதி வருகிறார். இவர்களை கண்டும் காணாமல் மேலே செல்ல அகிலன் நாங்க இங்க உட்கார்ந்து கிட்டு இருக்கோம் நீ பாத்து போயிட்டு இருக்க என கேட்க அதன்பிறகு பாரதி வந்து என்னை இப்போ நீங்க திரைக்கதை வசனம் எல்லாம் எழுதி வச்சிருப்பீங்களே என கேட்கிறார். பிறகு அகிலன் வெண்பாவுக்கு ஜாமீன் கூட கிடைக்காது. அவ மருத்துவத் தொழிலை தொடர முடியாது என சொல்கிறார். வெண்பா நிரபராதி, இந்த ஊரிலேயே பெரிய வக்கீலாக வெச்சு வெளியே எடுப்பேன். வெண்பா உள்ளே போறதுக்கு காரணம் கண்ணம்மா தான். ஏன் நீங்க கூட இந்தத் திட்டத்துல இருக்கலாம் என கூறுகிறார். பிறகு அந்த இடத்தை விட்டு நகர்ந்த பாரதியை அழைத்து சௌந்தர்யா நான் ஒன்னு சொல்றேன் அதையும் கேட்டுட்டு போ என சொல்கிறார்.
LIVE: விடாமல் அடித்து நொறுக்கிய கனமழை – வெள்ளத்தில் மிதக்கும் Chennai..!
பிறகு சௌந்தர்யா நீ வெண்பாவை வெளியே எடுக்க ஏதாவது உதவி செய்தால் நான் கண்ணம்மாவுக்கு உதவி செய்வேன். இது ஜென்டில்மேன் அக்ரிமென்ட்டா வெச்சிக்கோ. நீ என் பேச்சை மீறாத வரைக்கும் நான் உனக்கு கொடுத்த சத்தியத்தை மீற மாட்டேன் என சொல்கிறார். பாரதி பதில் சொல்ல முடியாமல் மேலே செல்கிறார். சௌந்தர்யா செய்தது சரியென அகிலனும் சௌந்தர்யா கணவரும் தட்டிக் கொடுக்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட்.