ஸ்கூலுக்கு போய் கண்ணம்மா முன்பு அசிங்கப்பட்டு வந்துள்ளார் வெண்பா.

Bharathi Kannamma Episode Update 08.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா இன்னைக்கு மட்டன் பிரியாணி வஞ்சரம் ப்ரை, முட்டை ஆகியவற்றை எடுத்து வந்து இருப்பதாக கூற ஹேமா பிரியாணி சாப்பிட்டு வாந்தி எடுத்ததை நினைத்து பார்த்து ஐயையோ உங்கள் சாப்பாடா வேண்டவே வேண்டாம் சாமி என கையெழுத்து கும்பிடுகிறார். ஏன் என்னாச்சு என வெண்பா கேட்க நேத்து நீங்க கொண்டுவந்த பிரியாணி சாப்பிட்டு ஒரே வாந்தி. ஒரு நாள் உங்க சாப்பாட்டை சாப்பிட்டதுக்கு இப்படின்னா தினமும் சாப்பிட்டால் தினமும் வாந்தி எடுக்கணும். இனிமேல் இங்கே கொண்டு வராதீங்க அப்படியே கொண்டு வந்தாலும் நான் சாப்பிட மாட்டேன் என ஹேமா கூறி விடுகிறார். மேலும் சமையல் அம்மாவிடம் சாரி சமையலில் அம்மா நேத்து உங்க சாப்பாட்டை வேணாம்னு சொல்லிட்டேன். நீங்க எனக்காக ஆசை ஆசையா சமைத்துக் கொண்டு வந்து இருப்பீங்க. இவ்வளவு நாளா உங்க சாப்பாட்டை சாப்பிட்டு எனக்கு வயிற்று வலி, வாந்தி எல்லாம் வந்ததே இல்லை என கூறுகிறார்.

ஹேமா இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் லஷ்மியும் வந்துவிடுகிறார். சரி வாங்க சேர்ந்து சாப்பிடலாம் என ஹேமா கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட சௌந்தர்யா கைதட்டி ஹேமாவை யாரிடம் என்ன சொல்லவேண்டுமோ அதை கரெக்டா சொல்லிட்ட எனப் பாராட்டுகிறார். பிறகு குழந்தைகளுக்கு சாப்பாடு கொடு என அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வெண்பாவிடம் பேசுகிறார். ‌‌ சின்ன குழந்தை கிட்டே இப்படி அசிங்கப்படுறயே உனக்கு வெட்கமே இல்லையா என சௌந்தர்யா கேட்க எல்லாரும் பிளான் பண்ணி என்ன கேவலப்படுத்தறீங்களா என வெண்பா கேட்கிறார். உன்ன அசிங்கப்படுத்த பிளான் எல்லாம் தேவையில்லை நீயே போதும் என சௌந்தர்யா கூறுகிறார்.

இன்னும் அஞ்சு நிமிஷம் நீங்க இருந்த நானே நாக்கு புடுங்கிற மாதிரி கேள்வி கேட்பேன் சௌந்தர்யா சொல்ல பிறகு வெண்பா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இந்தப்பக்கம் கண்ணம்மா இருவருக்கும் சாப்பாடு கொடுத்துக்கொண்டே இருக்க அப்போது ஹேமா உங்களுக்கு நான் சாப்பாடு எடுத்து வந்து இருக்கேன். இன்னைக்கு நான் தான் உங்களுக்கு ஊட்டி விடுவேன் என சொல்லி சாப்பாடு ஊட்டி விடுகிறார். உங்களுக்கு ஒத்து விடணும்னு ரொம்ப நாளா ஆசை என சொல்கிறார். பிறகு மாற்றி மாற்றி ஊட்டி விட்டுக் கொள்கின்றனர்.

மட்ட

அதன்பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவை சந்தித்து எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறுகிறார். எனக்கு லட்சுமி நெனச்சு தான் கவலை என கண்ணம்மா கூறுகிறார். அதான் பாரதி அப்பாவை பத்தி கேட்க கூடாது என்று சொல்லிவிட்டு வந்தானே என சொல்ல அவ வீட்ல எதையோ தேடுகிற உங்க அப்பாவ கண்டுபிடிக்க முயற்சி செய்கிறா என சொல்ல எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் என கூறுகிறார். நீங்களும் இதற்கு ரொம்ப நாளா சொல்றீங்க நானும் அத நம்பர மாதிரியே கேட்கிறேன். எனக்கு அந்த நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்று சொல்கிறார். பிறகு எல்லாம் சரியாகிவிடும் என சொல்வதை தவிர வேறு வார்த்தை இல்லை என கூறிவிட்டு சௌந்தர்யா வீட்டில் இறக்கி விடுகிறேன் என அழைத்துச் செல்கிறார்.

இந்தப் பக்கம் வீட்டுக்குப் போன வெண்பா லஞ்ச் பாக்ஸை தூக்கிப் போட்டுவிட்டு ஹேமா கண்ணம்மா முன்னாடி அசிங்கப்படுத்தியதை சொல்லி கோபப்படுகிறார். பாரதி அடைய இதுவரை செய்த எல்லா வேலையும் சொல்லு இவ்வளவு பண்ணியும் அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க யோசிக்கிறான் என பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் மாயாண்டி கைதட்ட அதிர்ச்சியாகிறார் வெண்பா. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.