கண்ணமா போட்ட திட்டத்தால் வெண்பா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Bharathi Kannamma Episode Update 05.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியுடன் கண்ணம்மா நெருக்கம் காட்டுவதை பார்த்த வெண்பா கண்ணம்மாவுக்கு போன் செய்கிறார். உன்னுடைய குழந்தையை நாளைக்கு பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் கொல்லப் போவதாக கூறுகிறார். நீ சொல்றதெல்லாம் இன்னும் நான் நம்ப மாட்டேன். மொதல்ல நீ என் குழந்தையை வீடியோ கால்ல காட்டு என கூறி போனை வைத்து விடுகிறார் கண்ணம்மா. கண்ணம்மாவுக்கு எப்படி என்கிட்ட அவளுடைய குழந்தை இல்லை என்கிற உண்மை தெரிந்தது என குழம்புகிறார் வெண்பா.

மீண்டும் கண்ணம்மாவுக்கு போன் செய்து உன் குழந்தை என்கிட்ட இல்ல தான். ஆனா நீ பாரதி கிட்ட நெருங்கி பழகுவது எனக்கு புடிக்கல இதோட விட்டுடு என கூறுகிறார். இனியும் பாரதியோட உன்ன பார்த்தேன் நடக்கிறதே வேற. நான் நினைத்ததை அடைய எந்த லெவலுக்கு வேணாலும் போவேன் என வெண்பா கூறுகிறார்.

வெண்பாவின் பேச்சைக் கேட்ட கண்ணம்மா நானும் பழைய கண்ணம்மா இல்ல நீ சொல்றதெல்லாம் கேட்டுட்டு இருக்க. உனக்கு பெரிய ஆப்பா வைக்கிறேன் என கூறிவிட்டு போனை வைக்கிறார்.

சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

வெண்பா மருத்துவமனையில் இருக்கும்போது அவரை பார்க்க வேண்டும் என இருவர் வருகின்றனர். வெண்பாவை பார்த்து இவள் இரண்டரை மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். அவளுடைய கணவர் எப்படியோ ஒரு நாயை வைத்து பிறக்கப்போவது பெண் குழந்தைதான் என்று தெரிந்து கொண்டு இவளை அடித்து துன்புறுத்துகிறார். கருவை கலைத்து விடு என கூறுகிறார். எங்களுக்கும் வேற வழி தெரியல. கருக்கலைக்க இடத்துல நீங்க தான் எக்ஸ்போர்ட் என கேள்வி பட்டோம். அதான் உங்களை பார்க்கலாம் என வந்தோம் என கூறுகிறார். 5 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவு செய்ய தயாராக இருக்கிறோம் என சொன்னதும் வெண்பா இதற்கு ஒப்புக் கொள்கிறார். முதலில் இரண்டு லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறோம் என பணத்தை கொடுக்கின்றனர்.

பிறகு எல்லா பணத்தையும் வாங்கிக்கொண்டு அபார்ட் செய்ய ஒப்புக் கொள்கிறார். பிறகு வந்தவர்கள் சந்தோஷமான விஷயம் நடந்த எங்க குடும்பத்துல விசில் அடிப்பது வழக்கம். ஒரே ஒரு விசில் அடிச்சுகிறோம் என கூறி ஒரு விசில் அடிக்கின்றனர். உடனே வெளியே இருந்து போலீஸ் உள்ளே வருகின்றனர்.

சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்வதை வெண்பா தானாக வைத்துக் கொண்டதை வைத்து அவரை கைது செய்கின்றனர். மேலும் என்பவை பார்க்க வந்தவர்கள் மாறுவேடத்தில் இருந்த போலீஸ் எனவும் தெரிய வருகிறது. பெண்பாவை கைது செய்து வெளியே கொண்டு செல்லும்போது அங்கு கண்ணம்மா நின்று கைதட்டுகிறார். இதற்கு காரணம் கண்ணாமா தான் என வெண்பா தெரிந்து கொள்கிறார்.

Annaatthe VS Enemy : Public Review | Rajinikanth, Vishal, Arya, Nayanthara

இந்தப் பக்கம் சௌந்தர்யாவும் அவருடைய கணவர் வேணுவும் பாரதிக்கு எப்படி விவாகரத்து விஷயம் நமக்குத் தெரியும்னு தெரிந்தது என பேசிக் கொள்கின்றனர். பாக்கியலட்சுமி தான் பாரதியிடம் இதை சொல்லி இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். இந்த நேரத்தில் பாரதி வந்து அப்பா அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அஞ்சலி கோவிலுக்குச் சென்று வருவதாக கூறுகிறார்.

இந்த நேரத்தில் அகிலன் கையில் லேப் டாப்பை தூக்கி கொண்டு இங்க பாருங்க என ஓடி வருகிறார். பிறகு லாப்டாப்பில் வெண்பா கைது செய்யப்பட்ட வீடியோவை காண்பிக்கிறார். மேலும் அவர் இனி மருத்துவத் தொழிலைப் பார்க்க முடியாது, அதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்தியில் கூறுவதை கேட்டு பாரதி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் அப்டேட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.