வெண்பாவை போலீசார் கைது செய்ய சௌந்தர்யாவுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பாவை கடத்தியதற்காக போலீஸ் கைது செய்வது போல கனவு கண்டு அதிர்ச்சி அடைகிறாள். சாந்தி என்ன ஆச்சு எனக்கு கேட்க இந்த ஹேமாவ கொல்லாம விட்டதுல நான் மாத்தி பண்ணனும் பயமா இருக்கு என கட்டிலில் கையை போட்டு அடிக்க காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

பிறகு சௌந்தர்யா மற்றும் வேணு என இருவரும் பாரதி பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வெண்பாவிடம் இந்த ஹேமாவும் இதே ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் ஆகி இருக்கா என விஷயத்தை சொல்கிறார். நான் ராசிபலன் பார்த்ததில் இந்த மாதம் உங்களுக்கு நேரம் சரியில்லை என சாந்தி எச்சரிக்கை எந்த போலீஸிம் என்ன கைது பண்ண முடியாது என வீர வசனம் பேசுகிறார்.

அடுத்து லட்சுமி சௌந்தர்யா, வேணுமற்றும் அஞ்சலியிடம் அம்மாவும் அப்பாவும் எதுக்காக பிரிந்து இருக்காங்க அவங்களுக்குள்ள அப்படி என்ன பிரச்சனை அப்படியே அவங்க பிரிந்து இருந்தாலும் அப்பா எங்க கிட்ட பேசி எங்களை கொஞ்சலாமே? எனக் கேட்க பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

அதன் பின்னர் வேணு லட்சுமியை உட்கார வைத்து அவளுக்கு அறிவுரை கூறுகிறார். இனிமே அம்மாகிட்ட திரும்பவும் இது பற்றி கேட்க கூடாது என சத்தியம் வாங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.