ஹேமா பேசிய பேச்சால் கடுப்பான பாரதி கோபத்தை வெளிக்காட்டி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் மேடையில் பேசிய ஹேமா நான் இன்னும் பேச வேண்டும் என சொல்லி எனக்கு அம்மா இல்லை லட்சுமிக்கு அப்பா இல்லை. எங்க அப்பாவை பார்த்துக்க புது அம்மா வேணும். அவங்க சமையல் அம்மா மாதிரி இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் என ஹேமா பேச சௌந்தர்யா நடப்பது நடக்கட்டும் என அமைதியாக இருக்கிறார். ஆனால் பாரதி சட்டென மைக்கைப் பிடுங்கி என்ன பேசுற என சொல்லிவிட்டு என் பொண்ணு கொஞ்சம் எமோஷனலாக ஆகிட்டா என கூறி எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு பிறகு ஹேமாவுக்கு பரிசளிப்பதற்காக நன்றி தெரிவித்து அங்கிருந்து கிளம்புகிறார் பாரதி.

பிறகு ஹேமாவிடம் எதுக்கு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க என கோபப்பட பிறகு குழந்தை பெற்றதற்கு கோபப்படுகிறாய் என சௌந்தர்யா திட்ட நியாயமா உங்க கிட்டதான் கோபப்படும் நீங்க தான் இப்படி அவளை பேசவைத்து இருப்பீர்கள் என பாரதி சண்டையிடுகிறார். ஹேமா பாட்டி எதுவும் சொல்லல நான் தான் பேசினேன். இப்ப கூட பாருங்க எல்லோரும் அம்மா அப்பாவோட வந்து இருக்காங்க நான் மட்டும்தான் அப்பாவோட வந்திருக்கேன் எனக்கும் அம்மா இருந்தால் நன்றாக இருக்கும். அதான் அப்படி பேசினேன் என்று கூறுகிறார்.

பிறகு உனக்கும் சொல்றேன் இங்க இருக்க மற்ற எல்லோருக்கும் சேர்த்து சொல்றேன். நம்ப வாழ்க்கையில எனக்கு நீ உனக்கு நான் அவ்வளவு தான். நம்ப ரெண்டு பேர் தவிர வேற யாருக்கும் இடமில்லை என கூறுகிறார். இந்தப் பத்தி நீ இனிமே என்கிட்ட பேசவே கூடாது என சொல்லிவிட்டு ஹேமாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் நான் மருத்துவமனைக்கு சென்று விட்டு வருகிறேன் என கிளம்பி விடுகிறார் பாரதி. இதைக் கேட்ட லட்சுமி அப்பா ரொம்ப மோசம் அவர் என்னை இப்படி சொல்லிட்டுப் போறாரு அப்போ உனக்கு விவாகரத்து கொடுக்கப் போவது உறுதி என்று சொல்கிறாரா என்று கேட்க கண்ணம்மா இதைப்பற்றி எல்லாம் பேசக்கூடாது என்று கூறுகிறார்.

இந்தப் பக்கம் தன்னை பொண்ணு பார்க்க வரும் மாப்பிள்ளைக்காக காத்திருக்கும் வெண்பா அவரை ஓட ஓட விரட்ட அடியாட்களை வைத்து அடித்து விரட்ட திட்டம் போட்டுள்ளார். இந்த நேரத்தில் ஷர்மிலா போன் செய்து மாப்பிள்ளை இன்னிக்கு வரல நாளைக்குத்தான் வராரு டிராபிக் மாட்டிக் கொண்டாராம் என்று சொல்லி விட்டு போனை வைத்து விடுகிறார். பிறகு வெண்பா இன்னைக்கு ப்ளான் கேன்சல் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப முயற்சிக்கும் போது அந்த அடியாள் கூட்டத்தின் தலைவன் வெண்பாவின் கையைப் பிடித்து முத்தமிட முயற்சி செய்கிறார். உங்க மேல எனக்கு ரொம்ப நாளா ஆசை உங்களுக்கு கட்டிப்பிடித்து முத்தமிடணும் என சொல்ல வேண்டாம் என்னை விடு என சத்தம் போடுகிறார்.

இந்த நேரத்தில் புதிய என்ட்ரியாக நபர் ஒருவர் மாசாக என்ட்ரி கொடுக்கிறார்‌. அடியாட்களை அடித்து நொறுக்க தொடங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.