Bhagyaraj & Vijay : பாக்யராஜின் சர்கார் பட தீர்ப்புக்கு நடிகர் விஜய் பதில் என்ன என்பதை பாக்யராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தளபதி விஜய் சர்கார் படத்தின் கதை திருட்டு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது அனைவரும் அறிந்ததே.
சர்கார் கதை குறித்து புகார் அளித்துள்ள வருண் ராஜேந்தர் தொடர்ந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்த இரண்டு கதைகளையும் ஒப்பிட்டு பார்த்த இயக்குனர் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவருமான கே. பாக்யராஜ் இரண்டு கதையும் ஒன்று தான் என கூறி பரபரப்பை அதிகப்படுத்தி இருந்தார்.
மேலும் இந்த விவகாரத்தால் எனக்கு தான் பிரச்சனை, என் பையன் என்னிடம் சண்டை போடுவான்.
மேலும் விஜய், விஜயின் அப்பா சந்திரசேகரிடம் சரியாக பேச முடியாது என கூறியிருந்தார்.
இதனையடுத்து அளித்துள்ள மற்றொரு பேட்டியில் தான் விஜயுடன் இது குறித்து பேசியதாகவும் அதற்கு விஜய் நீங்க தர்மசங்கடமாக பீல் பண்ணாதீங்க. முருகதாஸ் கோர்ட்ல பார்த்து கொள்கிறேன் என கூறி விட்டார்.
உங்க சைடு-ல என்ன பண்ணணுமோ அதை பண்ணுங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியதாக கூறியுள்ளார்.