BARC India Report About Vijay
BARC India Report About Vijay

இந்தியாவின் டிஆர்பி கிங் நடிகர் விஜய் தான் என வெளியான ரிப்போர்ட் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அதிர்ச்சிகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

BARC India Report About Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

சமீபத்தில் பார்க் இந்தியா நிறுவனத்தின் பெயரில் இந்தியாவின் டிஆர்பி கிங் தளபதி விஜய் தான் இந்த ஊரடங்கு காலத்தில் அவர் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக அறிக்கை ஒன்று வெளியானது.

விஜய்க்கு அடுத்ததாக ராகவா லாரன்ஸ் அவரைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இடம் பிடித்திருப்பதாகவும் அவருக்குப் பிறகு பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் இடம் பிடித்திருந்தார். ஐந்தாவது இடத்தில் பிரபாஸ் இடம் பிடித்திருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த ரிப்போர்ட் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

விஜய் மகனுக்கு வந்த சிக்கல்.. சங்கீதா கொடுத்த ஐடியா, சரியென தலையாட்டிய தளபதி – விஷயம் என்ன தெரியுமா?

ஆனால் தற்போது இந்நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் அது எங்களுடைய ரிப்போர்ட் அல்ல என விளக்கம் அளித்துள்ளது.

இதனால் இந்திய அளவில் டிஆர்பி-ல் விஜய் முதலிடத்தை பிடித்து இருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும் எங்கள் நிறுவனத்தின் லோகோவை தவறாக பயன்படுத்தி இந்த ரிப்போர்ட் வெளியாகி இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.