விஜய் மகனை வந்தே பார்த் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு அழைத்து வர தளபதி விஜய் திட்டமிட்டுள்ளார் ஆனால் அதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்துள்ளார்.
Sangeetha Advice to Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மகன் சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை மேற்கொண்டு வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அவரை வந்தே பாரத் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு அழைத்து வர விஜய் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அவரது மனைவி சங்கீதா இதன் மூலம் விமானத்தில் வந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். தன்னுடைய மகனுக்கு வேறு யாரிடமிருந்தும் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் கனடாவில் தன் குடும்பத்தாரின் பாதுகாப்பில் சஞ்சய் இருப்பதால் அவனுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை, அவன் அங்கேயே பாதுகாப்பாக இருக்கட்டும் என கூறியுள்ளார். இதனால் விஜயும் மனைவி சொல்லே மந்திரம் என தலையாட்டி விட்டு தன்னுடைய திட்டத்தை கை விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஞ்சய் அடுத்ததாக விஜய் சேதுபதியின் தயாரிப்பில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.