சூர்யாவின் சகாப்தம் முடிந்து விட்டது என பப்லு பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கார்த்தி ஹீரோவாக அறிமுகம் ஆகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பருத்திவீரன். அமீர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்த நிலையில் ஞானவேல் ராஜா அமீர் பருத்திவீரன் படத்தை இயக்கிய போது நிறைய திருடி விட்டதாக சொல்லி குற்றம் சாட்டிய விஷயம் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்கள் பலரும் அளவில் ராஜாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். படத்தில் நடித்த ஹீரோ கார்த்தி இதுவரை மௌனம் சாதித்து வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
ஞானவேல் ராஜாவின் உறவினர் என்பதால் சிவகுமார் குடும்பமும் அமைதி காத்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பப்லு பிரித்திவிராஜ் சூர்யா குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் சூர்யா நல்ல நடிகர் ஆனால் அவர் ஒரு சுயநலவாதி அவருடைய சகாப்தம் முடிந்து விட்டது என தெரிவித்துள்ளார். இது பழைய பேட்டி வீடியோ தான் என்றாலும் திடீரென சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது.