கேன்டின் இழுத்து மூடப்பட கோபி உற்சாகமடைந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன் இன்றைய எபிசோடில் பேங்கில் இருந்து கோபியை பார்க்க ஆஃபீஸர்ஸ் சிலர் வந்திருந்த நிலையில் வெளிய அழைத்துச் சென்று அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ராதிகா எதிரே வர கோபி அதிர்ச்சி அடைகிறார்.
ரெண்டு நாள் மட்டும் டைம் கொடுங்க இந்த விஷயம் வீட்ல யாருக்கும் தெரியாது அதனால பிரச்சனை செய்ய வேண்டாம் என்று கெஞ்சி கேட்டு கோபி அவர்களை அனுப்பி வைக்க ராதிகா வீட்டுக்குள் நுழைந்து பேங்க்ல இருந்து தானே வந்திருக்காங்க என்ன விஷயம் என்று கேட்க கிரெடிட் கார்ட் வாங்கிட்டு சொல்லி கேட்டுகிட்டே இருக்காங்க என்று சொல்லி சமாளிக்கிறார்.
இதைக் கேட்ட ராதிகா உங்க பிசினஸ் டல்லா போகுது, அப்படி இருக்கும்போது எப்படி கிரெடிட் கார்டு தரேன்னு சொல்றாங்க என்று கேட்க அதெல்லாம் இப்ப சரியாயிடுச்சு நல்லா போயிட்டு இருக்கு என்று கோபி கூறுகிறார்.
பாக்கியாவின் கேன்டினுக்கு சீல் வைத்து மூடப்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த விஷயம் என் வீட்டுக்கு தெரிய வர செழியன் தாத்தாவிடம் சொல்லி இருவரும் பதறியடித்து ஓட கோபி இது இப்படியே முடியாது போலீஸ் கேஸ் வரைக்கும் போகும் என்று சொல்லி ஈஸ்வரியை பயமுறுத்துகிறார்.
எல்லோரும் கேண்டீன் அருகில் கூறிவிட பத்திரிக்கையாளர்கள் பாக்யாவிடம் உணவை தரம் இல்லாமல் கொடுத்தது தப்பு தானே என்று கேட்க செல்வி உண்மை என்னன்னு தெரியாம வந்து இப்படி கேள்வி கேட்டு இருக்காதீங்க என்று திட்டி அனுப்பி விடுகிறார்.
அடுத்து எழில் மற்றும் பழனிச்சாமி இருவரும் ஆபீஸ் சென்று விசாரிக்க கோதண்டம் என்பவர் தான் கம்ப்ளைன்ட் கொடுத்ததாக தெரிய வருகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.