எழிலை கணேஷ் பாட்டிலால் தாக்க போலீஸ் ட்விஸ்ட் கொடுத்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கணேஷ் அமிர்தாவின் தாலியை பிடித்து இழுத்துக் கொண்டிருக்க எழில் அமிர்தா செழியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துவிட நிலா எழிலை பார்த்ததும் அப்பா என ஓடி வந்து விடுகிறது.
பிறகு அமிர்தாவும் கணேஷ் பிடியிலிருந்து தப்பி வர முயற்சி செய்ய கணேஷ் அவரை அடிக்க பாய எழில் கணேசனை பிடித்து வெளுத்து வாங்குகிறார். ஒரு கட்டத்தில் கணேஷ் எழிலை பாட்டிலால் தாக்க செழியன் யாரை அடிக்கிற என்று கணேஷை தாக்குகிறார்.
உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று கணேஷ் மீண்டும் தாக்க போலீஸ் வந்து கணேஷை கைது செய்கிறது. மறுபக்கம் போனவங்க அமிர்தா நிலாவை தேடி கண்டுபிடிச்சாங்களா இல்லையா என்ன ஆச்சு என்று தெரியாமல் தவிக்க கோபி பாக்யா தான் எல்லாத்துக்கும் காரணம் என்று பேச ஈஸ்வரி கூட தாளம் தட்டுகிறார்.
இங்கே பழனிச்சாமி போலீஸ் உடன் வர போலீஸ் கணேஷை கைது செய்து அழைத்துச் செல்ல இனிமே எந்த பிரச்சனையும் கிடையாது என்று பழனிச்சாமி எல்லோருக்கும் ஆறுதல் கூறுகிறார். நிலா பாப்பா பசிக்குது என்று சொல்ல பழனிச்சாமி போற வழியில எல்லாரும் சாப்பிட்டு போகலாம் என்று கூப்பிட்டுக் கொண்டு கிளம்புகிறார்.
இங்க வீட்டில் எல்லோரும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்க அமிர்தா பாக்கியா எழில் ஆகியோர் வீட்டுக்கு வருகின்றனர். நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஏற்கனவே பழனிச்சாமி உதவுவதாக சொன்னதாக ராமமூர்த்தி சொன்னதும் அதிர்ச்சியான கோபி பாக்கியா சொன்ன கதையை கேட்டு இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.
இனிமே கணேசால் எந்த பிரச்சனையும் வராதா என்று கேட்க பாக்யா இனிமே வரவே வராது என்று சொல்ல கோபி எல்லாம் உன்னால தான் இந்த பிரச்சனை கூறுகிறார். ராமமூர்த்தி இனிமே இத பத்தி பேசக்கூடாது என்று கூறுகிறார்.
பிறகு எழிலோடு பிரச்சனை முடிஞ்சிருச்சு இனிமே ராதிகாவை எப்படி சமாளிக்கிறது என்று தெரியல என்று புலம்ப ராதிகா ஆபீஸ் போகலையா என்று கேட்க கோபி சமாளிக்க நீங்க ஏதும் மறைக்கிறீங்களா என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.