ஓவராக பேசிய சுதாகர் பதிலடி கொடுத்த பாக்யா இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் ஓவராக பேச,பாக்யா பதிலடி கொடுத்துள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 09-05-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 09-05-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சீரியல்களில் ஒன்று பாக்யலக்ஷ்மி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் சுதாகரிடம் பாக்யாவின் கடையை காட்ட எவ்வளவு பேசண உனக்கு இது தேவைதான் என்று மனதில் நினைக்கிறார் உடனே செழியன் இடம் இது ஒரு தப்பான டெசிஷன் என்று உங்க அம்மா கிட்ட நீங்க சொல்லலையா என்று கேட்க சொன்னோம் ஆனா கட்டாயப்படுத்த முடியல, ஏற்கனவே அம்மா இப்படி ஒரு வாட்டி பண்ணி அதுல சாதித்து காட்டி இருக்காங்க அதனால தான் என்று சொல்ல அப்போ சம்பந்தி நம்பிக்கையா இருக்காங்கன்னா ஓகே தான் என்று சொல்லுகிறார் உடனே பாக்யா வந்தவுடன் கிளம்பலாம் சரியா என்று சொல்ல உடனே சுதாகர் உங்களுக்கு வாழ்த்து சொல்லலாம் என்று தான் நினைக்கிறேன் சம்பத்தி ஆனா என்னோட சம்மந்தி கையேந்திபவன் வெச்சிருக்காங்கன்றதை எப்படி நான் வீட்ல இருக்குறவங்களுக்கு சொல்றது ஏற்கனவே உங்க வசதியோட கம்மியா இருக்குற இடத்துல கல்யாணம் பண்ணிட்டீங்கன்னா கேக்குறாங்க நான் ரெஸ்டாரன்ட் வச்சு பிசினஸ் பண்றாங்கன்னு சொன்னேன் ஆனா இப்ப கையேந்தி பவன் வச்சா அது எங்க குடும்பத்த பாதிக்கு என்று நீங்க யோசிக்கலையா சொந்தக்காரங்களுக்கு என்ன சொல்றது என்று கேட்கிறார்.

இப்ப அது தானே உங்க பிரச்சனை நான் சொல்ற மாதிரி சொல்லுங்க என சொல்லி எங்க சம்பந்தி நாங்க வராத வரைக்கும் ரெண்டு ரெஸ்டாரன்ட் வச்சு பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க நாங்க வந்ததுக்கப்புறம் தான் கையேந்திபவன் நடத்துறாங்கன்னு சொல்லுங்க என்று சொல்லி பதிலடி கொடுத்துவிட்டு சென்று விடுகிறார் உடனே செழியன் சுதாகரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியில் வந்து பாக்யாவிடம் எதுக்குமா இப்படி பேசிகிட்டு இருக்க இனியா நினைச்சு பேச மாட்டியா என்று கேட்க இனியா இதுல இன்வால் இருக்கிறதுனால மட்டும்தான் நான் பேசிகிட்டு இருக்கேன் இல்லன்னா வேற மாதிரியா இருந்திருக்கும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் பாக்கியா ஹோட்டல் நாளைக்கு திறக்க இருப்பதால் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க கடையின் ஓனர் வந்து கடையை மாத்திட்டீங்களேம்மா என்று சொல்லி நாளைக்கு திறப்பு விழா இருப்பதாக பாக்கியா அவரை கூப்பிடுகிறார் நான் வராமலையா என்று சொல்லி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரம் பார்த்து ஏரியா கவுன்சிலர் என ஒருவர் வந்து ரவுடி மாதிரி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க பாக்யாவும் பதில் சொல்லுகிறார் லேடிஸ் நடுத்தர கடைனா அப்ப சாப்பாடு எல்லாம் டேஸ்ட்டா இருக்கும் அப்படித்தானே என்று கேக்க ஆமாம் என்று சொல்லுகிறார் அப்ப இனிமே எல்லாமே இங்க தான் என்று சொல்லிவிட்டு சென்றுவிட செல்வி கடையை திறக்கறதுக்கு முன்னாடி கஸ்டமர் வந்துட்டாங்க இனிமே எல்லாமே இங்க தானா இதுதான் சாப்பிடுவாங்க என்று சொல்ல அதற்கு அது அர்த்தம் இல்லம்மா இவங்க ஏற்கனவே பக்கத்து தெரு கடையில பஞ்சாயத்து பேசுறது அட்டி போடுவது என்று இருந்தாங்க அது மாதிரி இங்க பண்ண விட்டுறாதீங்க இவங்க கிட்ட கொஞ்சம் உஷாரா இருங்க என்று சொல்லுகிறார். வந்தவங்க கஸ்டமர் இருப்பாங்கன்னு பார்த்தா ஏழரையா இருக்கு என்று செல்வி சொல்ல எல்லாத்தையும் சமாளிச்சு தான் ஆகணும் பாத்துக்கலாம் என்று பாக்யா சொல்லுகிறார்.

மறுபக்கம் சுதாகர் வீட்டில் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டு இருக்க, இன்னைக்கு என்ன புதுசா ஸ்வீட் என்று சுதாகர் கேட்க நான் தான் ரெடி பண்ண சொன்னேன் என்று இனியா சொல்லுகிறார். அம்மா மூணாவது ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ண போறாங்க இல்ல அதுக்காக சின்ன செலிப்ரேஷன் காகத்தான் என்று சொல்லுகிறார். ஆனால் சுதாகர் ஒரு பக்கம் கடுப்பாக நித்திஷ் அம்மா ஸ்வீட் சூப்பராக இருக்கிறது என்று சொல்லுகிறார் தொடர்ந்து இனியா பாக்யாவின் பெருமைகளை பற்றி பேச சுதாகர் டென்ஷன் ஆகிறார். இனியா நித்திஷிடம் நாளைக்கு காலையிலேயே நம்ம சீக்கிரமா போகலாம் என்று சொல்ல அவரும் சரி என சொல்லுகிறார் உடனே இனியாவுக்கு போன் வர எழுந்து சென்று விடுகிறார் நாளைக்கு என்னப்பா கிப்ட் பண்றது என்று கேட்க எட்டுக்கு பத்து ரூம்ல தொறக்க போற கடைக்கு சுதாகரோட மகனும் மருமகளும் போகக்கூடாது என்று சொல்லுகிறார். உடனே நித்திஷ் சரியன சொல்ல நாளைக்கு இவங்க சித்தப்பாவும் சித்தியும் விருந்துக்கு கூப்பிட்டு இருக்காங்க நீங்க அங்க தான் போகணும் என முடிவு எடுக்கிறார். உனக்காக எல்லாத்தையும் இழந்துட்டேன் இழந்துட்டான்னு சொல்றாங்கல்ல கடையும் பொண்ணு இல்லாமையே தொறக்கட்டும் என்று சொல்லுகிறார்.

செழியன் ஈஸ்வரி இடம் சாக்லேட் கொடுத்து இனியா வாங்கிக் கொண்டு வந்ததாக சொல்ல சாப்பிட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். செழியன் பாக்கியா சுதாகரிடம் பேசிய விஷயத்தை சொல்ல ஈஸ்வரி டென்ஷன் ஆகிறார் உடனே பாக்யா வந்தவுடன் அவரை நிற்க வைத்து எதுக்கு சம்பந்தி கிட்ட தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்க உனக்கு இனியாவோட வாழ்க்கையை பத்தி கவலையே இல்லையா என்று எல்லாம் கேட்கிறார் எனக்கு இனியாவது வாழ்க்கையை பற்றி உச்சகட்ட அக்கறை இருக்கு என்று சொல்ல, உன்னோட வாய் கொழுப்பால ஏதாவது இனியா வாழ்க்கையில பிரச்சனை வந்தா நான் உன்னை சும்மா விடமாட்டேன் என்ன சொல்கிறார். பாக்யாவும் என்னால எதுவும் பிரச்சினை வராது என்று சொல்லிவிட்டு சென்று வருகிறார்.

மறுநாள் என்ன நடக்கிறது? ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 09-05-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 09-05-25