பாக்கியாவால் விவாகரத்து விஷயத்தில் ஜெனி யோசிக்க தொடங்க மாலினி என்ட்ரி கொடுத்து ட்விஸ்ட் வைத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா விவாகரத்து விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் நீ யோசித்து பொறுமையா முடிவெடு கோர்ட்லயும் இன்னும் கொஞ்சம் நேரம் வேணும்னு சொல்லு என்று அட்வைஸ் செய்கிறார். நீயும் நானும் ஒரு அம்மா பொண்ணு மாதிரி இருந்தோம், ஃப்ரெண்ட் மாதிரி இருந்தோம். ஆனா இன்னைக்கு பேசலாமா வேண்டாமா என்று யோசிக்கிற அளவுக்கு ஆயிடுச்சி என்று தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்ய ஜெனியும் அதை பார்த்து கண் கலங்குகிறார்.
இந்த நேரத்தில் ஜோசப் வந்து ரூமின் கதவை தட்ட ஜெனி என்ன விஷயம் என்று கேட்க உன்னை பார்க்க ஒருத்தவங்க வந்து இருக்காங்க நீ அவங்ககிட்ட கண்டிப்பா பேசணும், நாளையோட உன்னுடைய பிரச்சனை எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கப் போகுது என்று சொல்ல ஜெனி இப்போதைக்கு யாரையும் பார்த்து பேசுற மனநிலையில் இல்லை என சொல்கிறார்.
ஆனாலும் ஜோசப் எனக்காக பேசு என்று கட்டாயப்படுத்தி வெளியே கூட்டிச் செல்ல அங்கே மாலினி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இவங்க கிட்ட நான் எதுக்கு பேசணும் என்று ஜெனி ரூமுக்கு வர ஜோசப் தடுத்து நிறுத்தி ரெண்டு நிமிஷம் அவங்க பேசறது கேளு என்று நிற்க வைக்கிறார்.
மாலினி செழியன் உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு எனக்கு நிச்சயமாக தெரியாது. எனக்கு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா நான் செழியன் கிட்ட பேசி பழகி இருக்கவே மாட்டேன் என கூறுகிறார். மேலும் இப்போ உங்க வாழ்க்கையும் கெட்டுப் போச்சு என்னோட வாழ்க்கையும் கெட்டுப் போச்சு என்று சொல்ல ஜெனி இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம் என்று ரூமுக்கு வந்து விடுகிறார்.
மறுநாள் காலையில் பாக்யா மற்றும் செழியன் கோர்ட்டுக்கு வர செழியன் பதட்டத்தோடு இருக்க பாக்யா கொஞ்சம் அமைதியா பொறுமையா இரு சொல்லியா என சாந்தப்படுத்துகிறார். அதன் பிறகு ஜெனி மற்றும் ஜோசப் கோர்ட்டுக்கு வருகின்றனர். செழியன் ஜெனியை பார்த்தபடியே இருக்க ஜோசப் ஜெனியை மறைத்தபடி உட்காருகிறார்.
அதன் பிறகு வக்கீல் இந்த முறையும் கவுன்சிலிங் தான் போட்டு இருக்காங்க என்று சொல்ல அதைக் கேட்டு ஜோசப் எத்தனை முறை கவுன்சிலிங் போகிறது ஜெனி தன்னுடைய முடிவில் உறுதியா இருக்கா டிவோஸ் கொடுக்க வேண்டியது தானே என்று கேட்க வக்கீல் நாலஞ்சு முறையாவது கவுன்சிலிங் போடுவாங்க என்று கூறுகிறார்.
பிறகு இருவரும் கவுன்சிலிங் ரூமிற்கு வர செழியன் நான் தப்பு பண்ணிட்டேன் ஆனா அதை உணர்ந்துட்டேன் எனக்கு ஜெனியோட சேர்ந்து வாழணும் ஜெனி இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க சொல்லுங்க என்று கண்கலங்கி பேச ஜெனி தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
இறுதியாக கவுன்சிலிங் கொடுப்பவர் ரெண்டு வாரம் டைம் கொடுத்து இருவரையும் அனுப்பி வைக்கிறார். பாக்கியா ஜெனியிடம் நலம் விசாரிக்க ஜெனி உங்க வாய்ஸ் மெசேஜை கேட்டேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆண்ட்டி. ஆனா செழியன் பண்ண தப்பை என்னால மன்னிக்க முடியாது என சொல்ல ஜோசப் ஜெனியை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.
பிறகு பாக்கியா மற்றும் செழியன் இருவரும் காரில் வரும்போது நானும் இது பிரச்சனையை தீர்த்து வைக்கணும்னு எவ்வளவோ முடிவு பண்ண ஆனா ஆரம்பிச்ச இடத்திலேயே நிற்கிறது என்று பாக்யா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.