செழியனை வரவைத்து பாக்கியா செய்த வேலையால் ஈஸ்வரி கடும் கோபம் அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி. இவை இரண்டும் தற்போது மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோடில் கண்ணன் ராஜியிடம் நெருங்கி வர ராஜி விலகிச் செல்ல கண்ணன் கோபப்பட்டு நீ பழைய ராஜி கிடையாது என திட்ட அவரும் நீயும் பழைய கண்ணன் கிடையாது தான். ஊர்ல இருக்கும்போது எம்புட்டு பாசமா பேசுவ ஆனா இப்போ வந்து திட்டிக்கிட்டே இருக்க நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று அழ இதையெல்லாம் கேட்ட உள்ளே வர முடிவெடுத்து பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார்.

அதன் பிறகு செழியன் ஈஸ்வரியோடு ஹோட்டலுக்கு வந்து இறங்க ஈஸ்வரி இங்கே எதுக்குடா வந்திருப்போம் என்று கேட்க ரெப்ரஷ் ஆகிட்டு போகலாம் என்று சொல்ல ஊர்ல அவ்வளவு சொந்தக்கார வீடு இருக்கு அப்படி இருக்கும்போது ரூம் எதுக்கு போட்ட எனக்கே கேட்க குழந்தையோட போன அவங்க என்ன நினைப்பாங்க அதனால தான் என்று சொல்ல ஈஸ்வரியும் சரி என்று சொல்கிறார். பிறகு இவர்கள் ரெடியாகி கிளம்பி விட செழியன் கோவில் ஒன்றில் காரை நிறுத்த இது என்னடா கோவில் இங்க எதுக்கு வந்த என்று கேட்க வர வழியில இருக்க கோவில் தான் பாட்டி ரொம்ப சக்தி வாய்ந்த கோவிலில் சொன்னாங்க போயிட்டு போகலாம் என்று உள்ளே கூட்டி செல்கிறார்.

செழியன், ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கும் போது எதிரே வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறார் பாக்யா. ஈஸ்வரி எங்க அம்மாவ பாக்க தான் இங்க கூட்டிட்டு வந்தியா? என்று கேட்க பாக்யா நான் தான் அத்தை வரச் சொன்னேன் என்று சொல்கிறார். நீங்க பண்ணது பெரிய தப்பு என்று சொல்ல ஈஸ்வரி என்ன தப்பு குழந்தை மேல நமக்கு உரிமை இல்லையா அப்புறம் எப்படி தப்பாகும் என்ன பண்ணிடுவாங்க என்று வீர வசனம் பேசுகிறார்.

பிறகு ஜெனியின் குடும்பமும் கோவிலுக்கு வந்துவிட பாக்யா குழந்தையை ஜெனி இடம் கொடுத்து கிளம்ப சொல்ல ஈஸ்வரி நீ பண்ணது நம்பிக்கை துரோகம் என பாக்யாவிடம் கோபப்படுகிறார். ஜெனிடம் செழியன் ஒரு தப்பு பண்ணதும் இங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு போயிட்டல என்று எமோஷனலாக பேசுகிறார்.

நீ வீட்டுக்கு தானே வரணும் அங்க வச்சிக்கிற உனக்கு என்ன கோபப்பட்டு ஈஸ்வரி அங்கிருந்து வெளியே கிளம்ப செழியன் கலங்கி உட்கார பாக்கியா அவனுக்கு ஆறுதல் சொல்லப்பட கையை உதறிவிட்டு நீ என்னை ஏமாத்திட்டமா என்று கோபப்படுகிறார். பிறகு பாக்கியா செழியன் செய்தது தப்பு என்பதை புரிய வைத்து கண்டிப்பாக நீயும் குழந்தையோட சேர்ந்து வாழ்வீங்க என்று ஆறுதல் கூறுகிறார்.

மறுபக்கம் அப்பத்தா உட்கார்ந்து கொண்டிருக்க கோபி ராதிகா ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க ரூமுக்குள் தனியாக இருந்த முத்துவேல் கொஞ்ச நேரம் யோசித்து திடீரென கதவை சாற்றி விட இதை பார்த்த கோபி ராதிகாவின் கூப்பிட்டு ஏதோ தப்பா தெரியுது என்று சொன்னதும் ராதிகா அண்ணே கதவை திறங்க என சத்தம் போட எல்லோரும் பதற்றம் அடைகின்றனர். முத்துவேல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ய இவர்கள் சத்தத்தை கேட்டு பாண்டியன் வெளியே வந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.