கோபி சொன்ன வார்த்தையால் அதிர்ச்சி அடைந்துள்ளார் ராதிகா.
Baakiyalakshmi Serial Episode Update 03.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனி போட்டுக் கொடுத்த காபியை குடித்த செழியன் சூப்பராக இருப்பதாக கூறுகிறார். உடனே நானே கத்துக்கிட்டேன் இனி பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் என எல்லாத்தையும் செஞ்சு அசத்த போகிறேன் என ஜெனி கூறுகிறார். ஐயையோ வேண்டாம் இதோட நிறுத்திக்க என செழியன் கூறுகிறார். அதன் பிறகு நாம எங்கயாச்சும் வெளிய போலாமா என கேட்கிறார். படத்துக்கு போலாமா இல்ல ஷாப்பிங் போகலாமா என செழியன் கேட்க அதெல்லாம் வேண்டாம் என்று சொன்ன ஜெனி சர்ச்சுக்கு போகலாமா என கேட்கிறார். முதலில் ஷாக்கான செழியன் பிறகு போலாம் என கூறுகிறார். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் நாம சர்ச்சுக்கு போன விஷயம் மட்டும் பாட்டிக்கு தெரிய கூடாது. நீ வேற ஏதாச்சு சொல்லி சமாளிச்சிக்க என கூறுகிறார்.
இந்தப் பக்கம் எழில் ஆபீஸில் ஒரே சிந்தனையில் இருக்கிறார். அவருடைய நண்பர் சதீஷ் என்ன ஏது என கேட்க அமிர்தாவிடம் காதலை சொன்னதும் அதற்கு அமிர்தா வருத்தத்தையும் கூறுகிறார். அவங்களுக்குள்ள கல்யாண வாழ்க்கை பற்றி ஒரு பயம் இருக்கு. அல்லது அவங்க இன்னொரு திருமண வாழ்க்கை வேண்டாம் என நினைக்கிறாங்க போல. இல்ல நான் சொன்ன இடம் நேரம் தப்பா போச்சா என்னன்னு தெரியல. அவங்க அழும் போது எனக்கு கண்ட்ரோல் பண்ண முடியல நான் சொல்லிட்டேன் என கூறுகிறார். சதீஷ் இதெல்லாம் வேண்டாம் இப்படியே விட்டு விடு என சொல்ல அதெல்லாம் முடியாது ஒருநாள் அவங்களுக்கு என்னோட காதல் புரியும் என எழில் கூறுகிறார்.
அப்படியே இந்தப்பக்கம் வெளியே போய் வந்த கோபியின் அப்பா பாக்கியாவை அழைக்கிறார். சமைக்கிறதுக்கு இடம் பார்க்கணும் னு சொல்லிட்டு இருந்தல ஒரு இடம் பார்த்துட்டு வந்து இருக்கேன் என கூறுகிறார். இடம் பார்த்து சமைக்கிற அளவுக்கு பிசினஸ் வந்திடுச்சா என ஈஸ்வரி கேட்கிறார். இல்லாத அவர் தான் இங்க சமைக்க வேணான்னு சொல்லிட்டாரே அதனால தான் என பாக்கியா கூறுகிறார். பிறகு பாக்கியா அவருடைய மாமனார் மற்றும் செல்வி ஆகியோர் அந்த இடத்திற்குச் சென்று பார்க்கின்றனர். வீடு மிகப் பெரியதாக இருப்பதை பார்த்து வாடகை அதிகமாக இருக்கும் என அச்சப்படுகின்றனர். பிறகு பாக்யாவின் மாமனார் இதுல கொஞ்ச இடம் தான் இப்போ தராங்க. ஓனர் வெளிநாட்டுல இருக்கார் என கூறுகிறார். பிறகு பாக்கியா வீட்டை சுற்றி பார்த்துவிட்டு பிடித்து இருக்கு என கூறுகிறார். வீட்டின் உரிமையாளரின் சொந்தக்காரர் வாடகை 9000 பத்துமாதம் அட்வான்ஸ் என கூறுகிறார். அட்வான்ஸ் மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என பாக்யாவின் மாமனார் சொல்ல 50000 என கூறுகிறார். பிறகு டோக்கன் அட்வான்ஸ் ஆக 5 ஆயிரம் கொடுக்கின்றனர். மீதி பணத்தை தந்திரமோ அல்லது மறுநாள் காலையோ கொடுத்து விடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். நாம அவர்கிட்ட சொல்லாமலேயே நாம வீடு பார்த்ததுமே அவர் ஏதாவது சொல்லப் போறாரு பாக்கியா சொல்ல அவருடைய மாமனார் சொன்னா மட்டும் அவன் நாலு வார்த்தை நல்லதா சொல்லிடப் போறானா வா மா என கூறுகிறார்.
அஜித்தே சொன்னாலும் நாங்க Thala-ன்னு தான் கூப்பிடுவோம் – Actor Sendrayan Exclusive Speech
இந்த பக்கம் கோபி ராதிகா வீட்டில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது ராதிகா நீங்க நிறைய காபி குடிப்பீங்களா என கேட்க நோ என கூறுகிறார் கோபி. உன்னோட காபி ரொம்ப நல்லா இருக்கும் அதனால இங்க வந்தா கேட்பேன் என சொல்கிறார். பிறகு இந்த சாரி உனக்கு ரொம்ப நல்லா இருக்கு என கோபி கூறுகிறார். நான் இதை ஏற்கனவே கட்டி இருக்கேன் என ராதிகா சொல்ல ஏன் திரும்பவும் சொல்ல கூடாதா என கோபி கூறுகிறார்.
அதன் பிறகு தன்னுடைய ஆபீஸ் ரொம்ப லாஸ்ல போயிட்டு இருக்கு. சம்பளம் கொடுக்கக்கூட வருமானம் வரல என்னுடைய சொந்த சேவிங்ஸ்ல இருந்து தான் சம்பளம் கொடுத்து இருக்கேன். இனியும் இந்த ஆபீஸ் ரன் பண்ண முடியும்னு எனக்கு தோனல. பேசாம ஆபீசை இழுத்து மூடிவிட்டு வேறு ஏதாவது கம்பெனியில் கன்சல்டன்ஸியா சேர்ந்துவிடலாம் என்று யோசிக்கிறேன் என கோபி சொல்ல ராதிகா அதிர்ச்சியாகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவடைகிறது. அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் எழில் அமிர்தாவின் வீட்டில் அவரது குழந்தையை வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்க அமிர்தா ஓடி வந்து குழந்தையை வாங்கிக் கொள்கிறார். அவருடைய அம்மா என்ன ஆச்சு என கேட்கிறார். என்ன நடக்கிறது என நாளைய எபிசோடில் பார்க்கலாம்.