ஈஸ்வரி திட்டி கண்டிஷன் போட பாக்கியா பதிலடி கொடுக்க கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோட் வீட்டுக்கு வந்த பாக்யா இனிய கோபமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்க ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இதுதான் கூட்டிட்டு போறதா என்று கோபப்பட எழில் அவங்க என்ன சிட்டிவேஷன்ல இருக்காங்கன்னு தெரியாம பேசாத என திட்டுகிறார்.
அது வந்த ஈஸ்வரி எதுக்காக கிட்ட சத்தம் போட்டுட்டு இருக்க என எழிலை கிட்ட அமிர்தா கான்ட்ராக்ட் என்ன ஆச்சுமா? எப்போதிலிருந்து எக்ஸிபிஷன் ஸ்டார்ட் ஆகுது என கேட்கிறார். பாக்யா கான்ட்ராக்ட் நமக்கு கிடைக்கல குழுக்கள் முறையில் ஒருத்தரை தேர்வு செஞ்சாங்க என்று சொல்ல அப்போ இந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் போச்சா என ஈஸ்வரி ஆவேச பட எழில் ஒரு லட்ச ரூபாய் திரும்பி வந்துடும் என கூறுகிறார்.
அதையாவது அங்கேயே இருந்து வாங்கிட்டு வர வேண்டியதுதானே என்று சொல்ல பாக்கியா அது ஒரு மாசத்துக்குள்ள வந்துடும் என கூறுகிறார். அதெல்லாம் வரவே வராது அது போச்சு அவ்வளவுதான் என ஈஸ்வரி கோபப்பட கோபி நான் தான் முன்னயே சொன்னேனே, அது அவ்வளவுதான் என்ன பாக்யாவை திட்ட பாக்கியா அது என்னுடைய பணம் அந்த பணத்தை எப்படி வாங்கணும் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என பதிலடி கொடுக்கிறார்.
மேலும் ஈஸ்வரி இனிமே நீ வேலைக்கு போக வேண்டாம் எதுவும் பண்ண வேணாம் உன் மாமனாரோட பென்ஷன் பணத்தை அப்படியே உன்கிட்ட கொடுக்கிறேன். எழில், செழியன் சம்பளமும் உன்கிட்ட கொடுத்துடுவாங்க அதை வச்சுக்கிட்டு குடும்பத்தை பார்த்துகிட்டு பிள்ளைகளை பார்த்திருக்கிற வேலையை மட்டும் பண்ணு என அதிர்ச்சி கொடுக்கிறார்.
பாக்யா எனக்குன்னு வேலை வேணாவா நான் யாருடைய பணத்தையும் எதிர்பார்க்கல இந்த குடும்பத்தை நான் பாத்துப்பேன்னு சொல்லி இருக்கேன் நான் பாத்துக்குறேன் என பதிலடி கொடுத்துவிட்டு உள்ளே செல்கிறார்.
பிறகு பாக்கியா யோசனையில் உட்கார்ந்திருக்க அங்கு வரும் கோபி அட்வைஸ் கொடுக்க பாக்யா பதிலடி கொடுத்து அனுப்புகிறார். பிறகு செல்வி மற்றும் எழிலிடம் எனக்கென்னமோ இந்த காண்ட்ராக்ட் திரும்பவும் எப்படியாவது நம்ம கைக்கே வரும் என்று தான் தோணுது என் உள் மனசு அப்படித்தான் சொல்லுது என கூறுகிறார்.
பிறகு நைட்டு தூங்கும் போது ராதிகா தரையில் படுத்துக்கொள்ள கோபி மற்றும் ஈஸ்வரி பெட்டில் படுத்துக் கொண்டிருக்கும் போது தூங்காமல் இருக்கும் ஈஸ்வரிடம் கோபி தூக்கம் வரலையா என்று கேட்க பாக்யா பண்றது எதுவும் சரி இல்லை என கூறுகிறார். அவளால எல்லாருக்கும் கஷ்டம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.