ராதிகாவிடம் கையும் களவுமாக கோபி சிக்கியும் கடைசியில் ஒரு ட்விஸ்ட் உள்ளது.

Baakiyalakshmi Serial Episode Update 10.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியும் பாக்கியாவும் ஒன்றாக சேர்ந்து சொந்தக்காரர் ரிசப்ஷனுக்கு செல்கின்றனர். கோபி நேரம் ஆகிறது என பாக்கியாவிடம் சொல்ல கொஞ்ச நேரம் பொறுங்க என கூறுகிறார். இன்னும் பங்ஷனே ஆரம்பிக்கல என சொல்கிறார். இந்த நேரத்தில் கோபியின் சித்தி ஒருவர் வந்து கோபி எப்படிப்பா இருக்க என அவரை தொட்டு பேசுகிறார். பிறகு பாக்யாவை நலம் விசாரிக்க பாக்கியாவும் பதிலுக்கு அவரை நலம் விசாரிக்கிறார். பிறகு கோபி யாரது என கேட்க உங்களோட சித்தி. அத்தையோட சித்தி பொண்ணு என சொல்கிறார்.

இந்த நேரத்தில் ராதிகாவும் ரிசப்ஷனுக்கு வர அவர் முன்பக்க சீட்டில் வந்து அமர வந்து கொண்டிருந்த போது ஒருவர் அவரை அழைத்து அமர வைக்கிறார். இதனால் அவர் கோபியை சந்திக்க முடியாமல் போகிறது. பிறகு ஸ்டேஜுக்கு சென்று கிப்ட் கொடுக்க சென்ற போதும் கோபி மற்றும் பாக்கியாவை இருவர் மறைத்தபடி நின்று விடுகின்றனர். இதனால் இந்த முறையும் ராதிகாவால் இவர்களை பார்க்க முடியவில்லை.

பிறகு கோபியும் பாக்கியாவும் கிப்ட் கொடுக்க ஸ்டேஜுக்கு செல்லும் நேரத்தில் ராதிகா பக்கத்தில் உள்ளவரிடம் பேசிக்கொண்டு போனை பார்த்துக்கொண்டே மிஸ் செய்து விடுகிறார். பிறகு கோபியும் பாக்கியாவும் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது ராதிகா அங்கு வந்து கோபியை பார்க்கிறார். கோபியிடம் பேச சென்றபோது அங்கு கோபி அவரது சித்தியை பார்த்து முகத்தை மறைத்துக் கொள்கிறார். ராதிகா கோபி தன்னை பார்த்ததும் முகத்தை மறைத்துக் கொண்டதாக நினைத்துக் கொள்கிறார்.

தசைகள் பலம் பெற, நல்லதோர் ஆசனம்..

அதேபோல் பக்கத்தில் இருக்கும் பாக்யாவின் முகம் ராதிகாவிற்கு தெரியவில்லை. பாக்யா கட்டியிருக்கும் புடவையைப் பார்த்து இது நமக்கு வாங்கிய புடவை என தெரிந்து கொள்கிறார். போட்டோகிராபர் ஒரு போஸில் என சொல்ல இருவரும் மாறி மாறி ஊட்டி போஸ் கொடுக்கின்றனர். கோபி தன்னுடைய மனைவியுடன் சந்தோஷமாக இருப்பதை பார்த்த ராதிகா கண்கலங்கியபடி வீட்டிற்கு கிளம்புகிறார். ஆனால் கோபியுடன் இருப்பது பாக்யா தான் என்பது ராதிகாவிற்கு இன்னும் தெரியவில்லை. அதுதான் இன்றைய முக்கியமான ட்விஸ்ட்.

மண்டபத்தில் இருந்து கிளம்பிய ராதிகா அழுதுகொண்டே கோபி சொன்னது எல்லாம் நினைத்து எல்லாமே பொய். கோபி எதற்கு என்கிட்ட பொய் சொல்லணும். அவர் அவரோட குடும்பத்தோடு சந்தோஷமா இருந்தா எனக்கென்ன என நினைத்துக்கொண்டே வீட்டிற்கு செல்கிறார்.

இந்தப் பக்கம் இனியாவும் செழியனும் பேசிக்கொண்டிருந்தனர். இனியா ஸ்கூலில் இந்தப் பாட்டுக்கு தான் டான்ஸ் ஆடப் போகிறேன் ஆனால் இந்த ட்ரஸை அம்மா வாங்கி தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க என சொல்ல நான் வாங்கித்தருகிறேன் என செழியன் கூறுகிறார். இந்த நேரத்தில் பாக்கியா வந்து என்ன கேட்டுட்டு இருக்க என இனியாவிடம் கேட்க செழியன் சாக்லேட் கேட்டுட்டு இருந்தா எனக் கூறி சமாளித்து விடுகிறார். பிறகு பாக்கியா செழியனிடம் சாப்பிட்டியா எனக் கேட்க இல்லை பசிக்கவில்லை என கூறுகிறார். இப்படியே சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகிறது என பாக்கியா திட்டுகிறார்.

Suriya-வை தொடர்ந்து Vijay-யை இயக்கவிருக்கும் Siruthai Siva! – அவரே சொன்ன தகவல்

இந்த நேரத்தில் இனியா நீ ஜெனி அக்கா கிட்ட பேசுறியா இல்லையா என கேட்கிறார். இல்ல ஜெனி என்கிட்ட பேசுறதே இல்லை என சொல்ல அக்கா இன்னும் உன் மேல கோவமா தான் இருக்காங்களா என கேட்கிறார். நீ ஜெனி கிட்ட பேசுறியா என செழியன் கேட்க தினமும் அக்கா கூட சேட் பண்ணுவேன். அவங்க உன்ன பத்தி கேப்பாங்க என கூறுகிறார். உங்க எல்லார் கிட்டயும் என்ன பத்தி கேட்கிறா ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசுறது இல்லை என கஷ்டப்படுகிறார் செழியன்.

உடனே இனியா அக்காவுக்கு சாரி சொல்லி ஒரு கிப்ட் அனுப்பு என சொல்லி ஆன்லைனில் ஒரு கிப்ட் பேக்கேஜை காட்டுகிறார். அதன்பிறகு செழியன் அதனை ஆர்டர் செய்து ஜெனிக்கு அனுப்பி வைக்கிறார். ஜெனியின் வீட்டிற்கு கிப்ட் வருகிறது. அவருடைய அம்மா அதை வாங்கி ஜெனியிடம் கொடுக்கிறார். ஜெனி இதனைப் பிரித்துப் பார்த்துவிட்டு செழியன் அனுப்பி இருப்பதாக கூறுகிறார்.

இந்த நேரத்தில் ஜெனியின் அப்பா வந்து என்ன இது என கேட்க செழியன் சாரி கேட்டு அனுப்பி இருப்பதாக கூறுகிறார். உடனே அவருடைய அப்பா அந்த பொக்கேவை வாங்கி தூக்கி எறிகிறார். நீ ரொம்ப எமோஷனலா இருக்க. எது சொன்னாலும் நம்பிடுற. 2 பூவை அனுப்பி சாரி கேட்டா உன்னை அந்த வீட்டுக்கு அனுப்பி விடுவோமா? அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என கூறுகிறார். அப்பா இப்படி சொல்வதை கேட்டு ஜெனி கண் கலங்குகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.