கோபி பாக்யாவை திட்ட அந்த பக்கம் கொள்ளைகார கும்பல் கண்டுபிடித்துள்ளார் எழில்.
Baakiyalakshmi Serial Episode Update 08.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த பக்கம் கோபி பாக்கியாவை டீ கப்புகளை தூக்கி போட்டு உடைக்கிறார். அமிர்தாவின் அப்பா அம்மா எழில்க்கு போன் செய்ய சொல்கின்றனர்.
எழில் போனை எடுக்காததால் அமிர்தா இவரும் நடிக்கிறார் என நினைத்துக் கொள்கிறார். இனி எழில் இங்கே வர வேண்டாம் என முடிவெடுக்கிறார். பணத்தை கொள்ளையடித்த கும்பலை தேடி சென்றுள்ள ஒருவழியாக கும்பலை கண்டுபிடித்து விடுகிறார். அவர்களிடம் சண்டை விட்டு சம்பந்தப்பட்ட ஒருவரைப் பிடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் நேரத்தில் அவன் பைக்கில் தப்பித்து ஓடி விடுகிறான்.
இந்தப் பக்கம் பாக்கியாவிடம் காய்கறிகளை கொடுத்த நபர் பணம் கேட்டு எச்சரிக்கிறார். தெருவில் உள்ளவர்கள் நாளைக்கு பணம் வர வேண்டும் என கூறுகின்றனர். இனியா உன்ன நாளைக்கு போலீஸ் பிடிச்சிட்டு போய் அடிப்பாங்களா என அழுகிறார். கோபி தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் உனக்கு நான் இருக்கிறேன் என இனியாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.
தெருவில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் நேரத்தில் எழில் போன் செய்து உன்னுடைய பணம் கிடைத்துவிடும் அம்மா. பயப்படாத பயமா இருந்தா என்னுடைய முகத்தை நினைத்துக்கொள் என ஆறுதல் கூறுகிறார். உனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்து விட்டேன் என பாக்கியா இங்கே இருக்கிறார். எழில் குற்றவாளிகளை எப்படி பிடிப்பது என அழுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.