மேக்கப் ஆர்டிஸ்ட்டாக கணவன் மாற ரித்திகாவின் நிலைமை மோசமாக மாறியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி என்ற சீரியலில் அமிர்த வாகன நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் விஜய் டிவியில் பணியாற்றி வந்த வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறினார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரித்திகா தற்போது தன்னுடைய கணவர் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக மாறி தனக்கு மேக்கப் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். கடைசியில் என்ன பாக்கும்போது ஊசி பாசி விற்கிறவ மாதிரி இருக்கேன் என புலம்பி கணவரை திட்டுகிறார்.
இந்த க்யூட்டான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.