நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் கோபி.

Baakiyalakshmi Episode Update 07.03.22 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கவுன்சிலிங் காக்க சென்றிருந்த கோபி ஆகியவை வெளியே உட்கார வைத்துவிட்டு உள்ளே செல்கிறார். இத்தனை வருஷம் கழிச்சு ஏன் விவாகரத்து வாங்கறீங்க என உள்ளே இருந்தவர் கேட்க எங்களுக்குள் செட் ஆகவில்லை என கோபி கூறுகிறார். உங்க மனைவி எங்கே என கேட்க அவங்க வர விரும்பல இங்கிருந்து போன போதும் என நினைக்கிறாங்க என கூறுகிறார். 15 வயசுல பொண்ணு இருக்கும் போது விவாகரத்து பண்ண அந்த பொண்ணோட வாழ்க்கையை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க என சொல்ல என்னோட பொண்ணை நான் கூட கூட்டிட்டு போயிருவேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் தான் என் பொண்ணுக்கு பிரச்சனை என்ன கோபி கூறுகிறார். யோசித்து முடிவெடுங்க என கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர்.

பிறகு கோபி வெளியே வர பாக்கியா இப்போ நான் உள்ள போகட்டுமா என கேட்கிறார். இல்லை அதெல்லாம் வேண்டாம் நான் பேசி சமாளித்து விட்டேன். ஏற்கனவே பிசினஸ் தெரியாத உங்க மனைவியை ஏன் பார்ட்னராக்கறீங்கனு கேட்கிறாங்க. ‌ நீ போயிட்டு ஏதாவது உளறி வைக்காதே எனக் கூறுகிறார். பிறகு கோபிக்கு அந்த நேரத்தில் ராதிகாவிடம் இருந்து மெஸேஜ் வர நான் வீட்டிற்கு வருகிறேன் என மெசேஜ் செய்கிறார்.

பிறகு எனக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு நான் இப்படியே கிளம்புறேன் நீ ஆட்டோல போய்விடு என கோபி சொல்ல பாக்கியா இங்கிருந்து போக அதிக செலவாகும். நான் ட்ரெயின்ல போயிடுறேன் நீங்க ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுடுங்க என கூறுகிறார். ட்ரெயின்ல பார்க்க மட்டும் பணம் கொடுங்க உங்க கூட வந்ததால நான் பார்த்து எடுத்துட்டு வரல என பாக்யா சொல்ல கோபி 500 ரூபாயை எடுத்து நீட்டுகிறார். இவ்வளவு வேண்டாம் ஐம்பது ரூபாய் போதும் என கூறுகிறார் பாக்கியா.

பிறகு கோபி நேராக ராதிகா வீட்டிற்கு செல்கிறார். ராதிகா கோபியின் வருகைக்காக பாயாசம் செய்து காத்து கொண்டிருக்கிறார். கோபி வந்ததும் அவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியாக வரவேற்கிறார். எனக்கு இப்ப தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. லாயர் சொன்னது உங்க வைபை ரொம்ப கூலா இருந்தாங்க அவங்களுக்கு விவாகரத்து கொடுக்கவில்லை எந்த பிரச்சினையும் இல்லைனு சொன்னாங்க. எனக்கு இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. டின் ஏஜ் பொண்ணு மாதிரி ஃபீல் பண்றேன். வாழ்க்கைல சந்தோஷமா இருக்கலாம் என கூறுகிறார்.

இந்த பக்கம் செழியன் ஜெனியோடு பேசிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு போன் வருகிறது போனில் வாடகைக்கு வீடு பார்க்குமாறு கூறுகிறார். இதைக் கேட்ட ஜெனி கண்டிப்பா நான் வரமாட்டேன் என சண்டை போட்டுவிட்டு வெளியே வந்துவிடுகிறார். அதன்பிறகு ஜெனியை ஒரு ரெஸ்டாரன்ட் கூட்டிச் சென்று அங்கு அவருடைய அப்பா அம்மாவை வரவைத்து நான் தனியா போகலாம்னு சொல்லிட்டு இருக்கேன் ஆனா ஜெனி வரமாட்டுறா என செழியன் கூறுகிறார். அங்கேயும் ஜெனி நான் வரவே மாட்டேன் என பிடிவாதமாக இருக்க பிறகு அவருடைய அப்பா உனக்கு ஏன் செழியனை விட அவங்க தாத்தா மேல அதிக அக்கறை? நான் இந்த விஷயத்தில் செழியன் பக்கம்தான் என சொல்லிவிடுகிறார்.

இந்த பக்கம் ஸ்டேஷனிலிருந்து நடந்து வந்த பாக்கியா கோர்ட்டில் எவ்வளவு பேர் விவாகரத்து கேட்டு என்று நினைக்கிறார்கள். ஒரு பொண்ணு இவர் என்ன விட்டுட்டு போய்ட்டார் நான் குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி வாழ்வது என அழுகிறார். பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது என கூறுகிறார். நல்ல வேலை அதெல்லாம் நம்ம வீட்டுல நடக்கல அதுக்கு அந்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும் என ஈஸ்வரி கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.