செழியன் ரூட்டு மாறி போக கண்ணீருடன் உள்ளார் இனியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா செழியனுக்கு போன் செய்து இனியாவுடன் ட்ரிப் போயிட்டு வர சொல்ல செழியன் முடியவே முடியாது என்று சொல்வது மட்டுமல்லாமல் இனியாவை ட்ரிப்பை கேன்சல் பண்ண சொல்லுங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறான்.
அடுத்ததாக மாலினி இன்னைக்கு ஒரே நாள் மட்டும் என் கூட இருங்க என்று சொல்ல உடனே செழியன் அம்மாவுக்கு போன் போட்டு இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நைட் வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்ல மாலினி சந்தோஷப்படுகிறார்.
அடுத்ததாக பாக்கியா ரூமுக்கு வர இனியா ட்ரிப்புக்கு போக முடியாத சோகத்தில் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்க எழில் ஏதாவது ஏற்பாடு பண்ணுவான் அப்படி இல்லனாலும் நான் உன்னோட ட்ரிப்புக்கு வரேன் என்று சொல்லி இனியாவை சமாதானம் செய்கிறார்.
மறுநாள் காலையில் இனியா என்னுடைய அசைன்மென்ட் ட்ரிப் அவ்வளவுதான், போக முடியாது என அழுது புலம்ப எழில் அம்மா நீயே கூட போயிட்டு வா என்று சொல்ல பாக்கியா செழியன் காரை எடுத்துக்கிட்டு நீயும் நானும் போயிட்டு வரலாம் என்று சொல்ல ஈஸ்வரி நீ எப்படி அவ்வளவு தூரம் கார் ஓட்டுவ அதெல்லாம் வேண்டாம் என கூறுகிறார். அப்படின்னா டிரைவர் போட்டுட்டு போறோம் என்று சொல்ல யாரோ ஒரு ஆளை நம்பி உங்க ரெண்டு பேர எப்படி அனுப்புவது என அதுக்கும் கேட்டு போடுகிறார்.
ராமமூர்த்தி நான் கூட போயிட்டு வரேன் என்று சொல்ல உங்களால அவ்வளவு தூரம் உட்கார்ந்துட்டு போக முடியாது என நோ சொல்கிறார். இதனையடுத்து பாக்கியா அப்படினா துணைக்கு நீங்க வாங்க என்று சொல்லி ஈஸ்வரியை அழைக்க முதலில் மறுக்கும் ஈஸ்வரி பிறகு ஓகே சொல்கிறார். செல்வி நானும் வரேன் என்று சொல்ல ஈஸ்வரி அவளும் வரட்டும் எனக்கு துணையாக இருக்கட்டும் என கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து அமிர்தா, செல்வி, பாக்கியா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் கிச்சனில் இருக்க செல்வி எல்லாரும் வெளியில போயிருவோம் நீயும் எழில் தம்பியும் மட்டும் தான் வீட்ல இருப்பீங்க தேன்நிலவு, தேன் சூரியன் எல்லாத்தையும் கொண்டாடுங்க என்று கலாய்க்க அமிர்தா வெக்கப்பட்டு ரூமுக்கு ஓடி விடுகிறார்.
மறு பக்கம் ராதிகா வீட்டுக்கு வரும் சந்துரு மயூவுக்கு பெரிய அளவில் பண்ணனும் என சொல்கிறார். பிறகு மயூவுக்காக நிறைய கிப்ட் வாங்கி வந்திருப்பதாக சொல்ல எல்லோரும் அதை பார்க்கச் சென்றுவிட கோபி இனியாவுக்கு போன் செய்து சாரி கேட்டு காலேஜ்ல ஒரு வாரம் போஸ்ட்பாண்ட் பண்ண சொல்லி கேட்டியா என்ன சொன்னாங்க என்று கேட்க இனியா பாக்யாவோட ட்ரிப் போறேன் என்று சொல்ல கோபி அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.