கணேஷின் பெற்றோர் கைவிட பாக்கியா முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா கண்ணீருடன் பூஜை அறை முன்னே உட்கார்ந்து அடுத்தடுத்து எவ்வளவு பிரச்சனை தான் கொடுப்பீங்க என்று கண்ணீரோடு கலங்குகிறார். போதும் இதுக்கு மேல சின்ன பிரச்சனை வந்தாலும் என்னால தாங்க முடியாது என அழுகிறார்.
அதைத்தொடர்ந்து மறுநாள் காலையில் எழுந்து செழியனுக்காக காபி போட்டு எடுத்துச் செல்ல செழியன் தூங்கிக் கொண்டிருக்க அந்த காப்பியை செடியின் பக்கத்திலிருந்த கோபிக்கு கொடுத்துவிட்டு வருகிறார். ராதிகா கோபிக்காக போட்ட காபியை பாக்கியாவுக்கு கொடுக்கிறார்.
அடுத்ததாக கணேஷ் பாக்யாவுக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு அமிர்தாவை கூட்டிட்டு வர போறேன் என்று சொல்லிக் கிளம்ப பிறகு பாக்கியா போன் போட்டு கொஞ்சம் கணேஷிடம் பேசுங்கள் என்று சொல்ல கணேஷ் இங்கிருந்து கிளம்பிட்டான் இனிமேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
அதன் பிறகு பதற்றத்துடன் பாக்கியா பழனிச்சாமிக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்ல அவர் வீட்ல முதல்ல இந்த விஷயத்தை சொல்லுங்க என்று கூறுகிறார். நான் சொல்லிடுறேன் என போனை வைக்கும் பாக்கியா உடனடியாக அமிர்தாவின் அம்மாவுக்கு போன் போட்டு கணேஷ் உண்மையை சொல்ல வரும் விஷயத்தை சொல்ல அவரும் பதற்றம் அடைகிறார்.
பிறகு பாக்யா என்ன செய்வது என தெரியாமல் எழில் மற்றும் அமிர்தாவை உடனடியாக கோவிலுக்கு போக சொல்லி வற்புறுத்தி அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.