பள்ளியில் ஆசிரியரின் டார்ச்சர் தாங்காமல் தவிக்கும் இனியாவின் தோழி விபரீத முடிவை எடுத்துள்ளார்.

Baakiyalakshmi Episode Update 25.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பள்ளியில் வந்த இனியாவை பாக்கியாவும் ஜெனியும் என்னாச்சு என கேள்வி மேல் கேள்வி கேட்க அவர் ஒன்றும் இல்லை எனக்கூறி ரூமிற்கு சென்று விடுகிறார்.

அதன்பிறகு பாக்கியாவும் எழிலும் அமர்ந்து வீடியோ ஒன்றை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அப்போதும் இனியா அமைதியாக இருப்பதைப்பார்த்து என்ன எது எனக் கேட்க அண்ணாவிடம் உண்மையை சொல்லிவிடலாம் என இனிய முடிவு செய்ய அந்த நேரத்தில் அவருக்கு அவருடைய தோழி போன் செய்து கம்பியூட்டர் சார் திட்டுறாரு என கூறுகிறார். எனக்கு பயமா இருக்கு என கூறுகிறார். அதன்பிறகு இனிய வீட்டில் எதையும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்.

இந்த பக்கம் செழியன் ஜெனியும் இருவரும் வெளியே செல்லலாம் என பேசிக் கொள்கின்றனர். வெளியே சென்று வந்த அவர்கள் வெளியில் சென்றதை ஈஸ்வரி பாட்டியிடம் சொல்லாமல் வீட்டிற்குச் சென்று வந்ததாக பொய் சொல்லி விடுகின்றனர். அதன்பிறகு ஜெனி பாக்கியா விட நாங்க வெளியில் போயிட்டு வந்தோம் என கூறி அவருக்கு செழியனை மாற்றி கொடுத்ததற்காக தேங்க்ஸ் சொல்கிறார்.

மறு நாள் பள்ளியில் இனியாவையும் அவரது தோழிகளையும் அழைத்து கம்ப்யூட்டர் சார் மிரட்டுகிறார். நீங்க போய் ப்ரின்சிபால் மேடம் கிட்ட சொன்னா அது பிரச்சனை உங்களுக்கு தான் என கூறுகிறார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் அனைவரும் தவிக்கின்றனர். வீட்டில் சொல்ல தோழிகள் பயப்படுகின்றனர். இனியா என் வீட்டில் சொல்கிறேன் என சொன்னதற்கும் அவர்கள் வேண்டாம் என கூறி விடுகின்றனர். மாலையில் பள்ளியை விட்டு வீட்டிற்கு கிளம்பிய இனியா அவருடைய தோழி அங்கு அமர்ந்து இருப்பதை பார்த்து வீட்டுக்கு போகலையா என கேட்க எனக்கு பிடிக்கல என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான புரோமோ வீடியோவில் தன்னுடைய தோழி தூக்கு போட்டுக் கொண்டு இறந்துவிட்டதாக இனியா கதறி அழுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.