செழியனின் நடத்தையில் பாக்யாவுக்கு சந்தேகம் வர கோபிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சென்னை கானா சீமந்த ஏற்பாடுகள் கோலாகாலமாக நடக்கிறது.
விருந்தினர்கள் எல்லோரும் வருகை தர மாலை வாங்க போன செழியன் போனில் மாலினியுடன் பேசிக் கொண்டே வீட்டிற்கு வருகிறார். சீமந்தம் வேலைகளில் எல்லாரும் பிஸியாக இருக்க செழியன் தொடர்ந்து மாலினியுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்.
பழனிச்சாமி தன்னுடைய அம்மாவுடன் வருகை தர பிறகு எல்லோரும் வந்ததால் ஜெனி மற்றும் செழியனை உட்கார வைத்து நலங்கு வைக்க தொடங்குகின்றனர். இதற்கிடையிலும் செழியன் மாலினி மெசேஜ் செய்யும் போதெல்லாம் போனை எடுத்து ரிப்ளை செய்ய முயற்சி செய்ய பாக்யா ஒவ்வொரு முறையும் போனை கீழே வை என சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
அடுத்ததாக கோபி, ராதிகா மற்றும் மயூ ஆகியோர் சீமந்த நிகழ்ச்சிக்கு வர கோபி பழனிசாமி நலங்கு வைத்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கோபி கொடுக்கும் முக பாவனைகளை பார்த்த ராதிகா பங்ஷனுக்கு வந்தனா போன மாதிரி இருக்கணும் அதை விட்டுட்டு பழனிசாமி என்ன பண்றாரு பாக்யா என்ன பண்றாங்கன்னு பாலோ பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா விட்டுட்டு போய்கிட்டே இருப்பேன் என்று எச்சரித்து வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார் ராதிகா.
அடுத்து கோபி ராதிகா நலங்கு வைக்க பாக்கியா சைகையில் மயூவை நலம் விசாரிக்கிறார். சீமந்தம் முடிந்து பேக்குடன் கீழே வரும் கண் கலங்க எல்லோரும் பதற்றம் அடைய தனது அம்மாவிடம் மம்மி நான் இங்கே இருந்துடட்டுமா என்று கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.