பாக்யாவை எல்லோரும் ரவுண்ட் கட்ட செழியன் கோபியிடம் தப்பு செய்ய அம்மாவும் காரணம் என்பது போல பேசுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை ரூமுக்கு கூட்டிச்சென்று நீ ஏன் இப்படி சத்தம் போட்டு பேசிட்டு இருக்க பாக்கியா பண்ணது பெரிய தப்பு, நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற என கோபப்படுகிறார்.
செழியன் தப்பு பண்ணிட்டு உட்கார்ந்துட்டு இருக்கான் அவனை எதுவும் யாரும் கேட்கல எல்லாரும் சேர்ந்து அவர்களை திட்டிக்கிட்டு இருக்கீங்க அவங்க உங்ககிட்ட பேச வந்தாங்க ஆனா நான் தான் இடையில் வந்து குழப்பி விட்டுட்டேன் என கூறுகிறார். ஜெனி ரொம்ப வருத்தப்பட்டு போயிருக்க அதுக்கு தீர்வு என்னன்னு தெரியணும் என சொல்கிறார்.
கோபி இனிமே இந்த விஷயத்துல நீ தலையிட வேண்டாம். இது எங்க குடும்ப பிரச்சனை நாங்க பாத்துக்கிறோம் என சொல்ல அப்போ நான் யாருன்னு கேட்டு ராதிகா ஆப்பு வைக்கிறார்.
சும்மா விட கூடாது என கோபப்பட இன்னொரு பக்கம் கோபி செழியனை சந்தித்து பேச செழியன் அவர் சொன்னதுல பாதி உன்ன பாதி பொய் என கூறுகிறார். கோபி பாதி உண்மைதானே நீ செஞ்சது தப்பு ஜெனியை எவ்வளவு ஆசை ஆசையா காதலிச்சு கல்யாணம் பண்ண, அவளுக்கு நீ நம்பிக்கை துரோகம் பண்ணிட்ட என்று கூறுகிறார். செழியன் ஜெனிக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது அவ என்கிட்ட கல்யாணத்துக்கு அப்புறம் சரியா கூட பேசல வெளியே கூட வரல எப்பவும் அம்மா கூடவே இருந்தா அதனால எனக்கு மாலினி பேசினது ஆறுதலா இருந்துச்சு என சொல்ல என்னதான் இருந்தாலும் நீ பண்ணது தப்பு என கோபி கூறுகிறார். அதே சமயம் ஜெனி உன்னை விட்டு போக மாட்டா நீ திருந்திட்டேன்னு தெரிஞ்சா அவர் கண்டிப்பா உன்னை தேடி வருவா என சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து பாக்கியா எல்லோரும் திட்டியதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்க இனியாவும் எழிலும் ஆறுதல் கூறுகின்றனர். திடீரென பாக்யாவுக்கு எழில் பிரச்சனை குறித்து ஞாபகம் வர செடியின் விஷயத்தில் நடந்தது எழில் விஷயத்திலும் நடக்கக்கூடாது நாமளே உண்மையை சொல்லிவிட வேண்டும் என முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.