அமிர்தாவுடன் வந்து கல்யாணத்தை நிறுத்தி உள்ளார் பாக்கியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோடில் அமிர்தாவிடம் மன்னிப்பு கேட்ட எழில் சதீஷ் அங்கு வர அவனிடம் அமிர்தாவை வீட்டில் கொண்டு போய் விட்டு விடு என சொல்லி அனுப்பி வைக்கிறான்.

பிறகு மறுநாள் எழில் கல்யாணத்துக்கு தயாராகி நின்று கொண்டிருக்க அப்போது சதீஷ் வர அமிர்தாவை வீட்டில் விட்டுட்டியே என கேட்க நண்பனோட கார்ல அனுப்பி வச்சிட்டேன் என சொல்கிறார். அதன் பிறகு ஐயர் மணமடைக்கு அழைத்து வரச் சொன்ன செழியன் எழிலை அழைத்துச் செல்கிறார்.

பிறகு ஈஸ்வரி பாக்யா எங்கே எனக் கேட்க ஜெனி வீட்டுக்கு போய் இருக்காங்க நைட் போனாங்க இன்னும் வரல வந்துட்டு இருக்கறதா தான் சொன்னாங்க. மணமேடையில் உட்கார போக அப்போது அங்கு வரும் பாக்கியா ஒரு நிமிஷம் என சொல்லி இத கல்யாணம் நடக்காது என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதன் பிறகு ஈஸ்வரி பாக்கியவ உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? ஏழு மணிக்கு இந்த கல்யாணம் நடக்கிறது தான் நல்லது என சொல்லி இருவரையும் மணமேடையும் உட்காரச் சொன்ன பாக்கியா ஒரு நிமிஷம் மணமேடை வரை வந்து ஒரு கல்யாணம் நிக்கறதுனால ஒரு பெண்ணோட மனநிலை எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது ஆனால் எனக்கு இப்போ எழில் பக்கம் நிற்கிறது தவிர வேறு வழி இல்ல என்னை மன்னிச்சிடுங்க என வர்ஷினியிடம் மன்னிப்பு கேட்கிறார்.

பிறகு அமிர்தாவை அழைத்துக் கொண்டு வர அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் எழில் விரும்புனத இந்த பொண்ண தான் என சொல்ல வர்ஷனியின் அப்பா இனியும் இங்கு நின்னு அவமானப்பட முடியாது வா போகலாம் என கூப்பிட ஈஸ்வரி இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் எழில் வர்ஷினி கழுத்துல தாலி கட்டுவான் என சொல்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.