கோபியை திருமணம் செய்ய ராதிகா கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் கோபியுடன் கல்யாணம் செய்து வைக்க வேலைகளை பார்க்க சொல்ல கல்யாணமா இப்ப எதுக்கு என ராதிகா சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். பிறகு உனக்காக வீடு பொண்டாட்டி பிள்ளைகள், அப்பா, அம்மா எல்லோரையும் உதறி தள்ளிட்டு வந்திருக்கேன். இப்போ உடம்பு சரியில்ல நான் கூட தண்ணி கொடுக்க யாரும் கிடையாது என கோபி சொல்கிறார். பிறகு ராதிகா இன்னொரு முறை நானும் என் பொண்ணு மயூவும் நிற்கதியா நிற்கிற நிலை வராது என்று எனக்கு பிராமிஸ் பண்ணுங்க என சொல்ல கோபி சத்தியமா வராது. நூறு சதவீதம் உனக்கு நான் ப்ராமிஸ் பண்றேன் என கூறியுள்ளார்.

இந்த பக்கம் பாக்யா பேப்பரில் ஒரு கல்யாண மண்டபத்திற்கு கேப்டன் சர்வீஸ் ஆர்டரை பார்த்து விட்டு அதை எடுக்கலாம் என முடிவு செய்து ஜெனியிடம் உதவி கேட்கிறார். இது பெரிய மண்டபம் ஒரே நேரத்துல நாலஞ்சு கல்யாணம் நடக்கும் அதை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் என சொல்ல பாக்கியா தன்னம்பிக்கையாக சில வசனங்களை பேசி அப்ளை செய்ய சொல்கிறார்.

பிறகு கோபி ஸ்கூலில் இனியாவை பார்க்க இருவரும் வெளியே போக முடிவெடுத்து கிளம்ப இந்த பக்கம் பாத்தியா வீட்டுக்கு இனிய வராததால் பதறிப்போக பிறகு வேன் டிரைவருக்கு போன் போட்டு கேட்க அவர் இனிய பஸ்ஸில் வரவில்லை என சொல்ல அதிர்ச்சி அடைகிறார். இந்த விஷயத்தை கேட்டு குடும்பத்தால் எல்லோரும் அதிர்ச்சி அடைய ஈஸ்வரி எல்லாத்துக்கும் நீதான் காரணம் என பாக்கியா மீது பழியை போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.