Baakiyalakshmi Episode Update 03.07.23
Baakiyalakshmi Episode Update 03.07.23

பழனிச்சாமிடம் கோபி சண்டை போட பாக்யா பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி பாக்கியா செல்வி உள்ளிட்டவருடன் கிச்சனில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கு சுதாகரின் மனைவி வந்து ஒரு டிஷ் சொல்ல மறந்துட்டேன் என சொல்லி பக்லா செய்து விடுங்கள் என்று சொல்ல பழனிச்சாமி அப்படின்னா என்னன்னு தெரியாமல் முழிக்க பாக்யா செஞ்சிடலாம் என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பிறகு அந்த ஸ்வீட்ட ஒருமுறை சாப்பிட்டு இருக்கேன் ஆனா எப்படி செய்வது என்று தெரியாது எப்படி சமைக்க போறன்னு தெரியல என வருத்தப்பட பழனிச்சாமி உங்களால் கண்டிப்பாக செய்ய முடியும் ஒரு அஞ்சு நிமிஷம் என சொல்லி வெளியே சென்று வீடியோ பார்த்து விட்டு உள்ளே வந்து பில்டப் கொடுக்க பாக்யா வீடியோ ஓடிக்கிட்டு இருக்கு அத ஆப் பண்ணுங்க சார் என்று பல்பு கொடுக்கிறார்.

பிறகு பழனிச்சாமியிடம் இருந்து போனை வாங்கி பார்த்து எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொண்டு பாக்கியா அந்த ஸ்வீட்டையும் செய்து அசத்துகிறார். பழனிச்சாமி இடம் கொண்டு சென்று டேஸ்ட் செய்ய கொடுக்க அதை சாப்பிட்ட அவர் சூப்பராக இருக்கிறது என பேசிக்கொண்டு இருக்க இந்த சமயம் அந்த பக்கமாக வரும் கோபி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து டென்ஷன் ஆகி சண்டை போட வருகிறார்.

இந்த நேரம் பார்த்து ராதிகா போன் செய்து எனக்கு போர் அடிக்குது உடனே ரூமுக்கு வாங்க என்று கூப்பிட கோபி ரூமுக்கு சென்று விடுகிறார். அங்கே ராதிகாவிடம் டென்ஷனாக பேச ராதிகா எழுந்து தனியாக சென்று விடுகிறார்.

அடுத்ததாக சுதாகரும் பழனிச்சாமியும் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கோபி அவரிடம் சத்தம் போட பழனிச்சாமி தனியாக கூப்பிட்டு சென்று இது என் பிரண்டோட பொண்ணு கல்யாணம் இங்க பாக்கியா மேடம் சமையல் வேலை பார்க்க வந்திருக்காங்க தேவையில்லாமல் பேசி பிரச்சனை பண்ண வேண்டாம், நானும் உங்கள மாதிரி சத்தம் போட்டு பேசினால் நல்லா இருக்காது என நல்லபடியாக சொல்ல கோபி என்ன மிரட்டுரியானு கேட்கிறார்.

மறுபக்கம் சுதாகர் செல்வியிடம் யாருமா இது? இவருக்கும் பழனிக்கும் என்ன பிரச்சனை என கேட்க அவங்க பாக்கியா மேடமோட ஹஸ்பண்ட் என சொல்கிறார். பிறகு கோபி அங்கிருந்து கிளம்பி சென்றதும் சுதாகரும் நகர்ந்து சென்றதும் செல்வியிடம் நீ மேடம் ஓட வீட்டுக்காரர் என்று சொன்னியா என்று கேட்க ஆமா சார் என்று சொல்கிறார்.

அவங்களுக்குள்ள தான் இப்போ ஒன்னும் இல்ல, எல்லாம் முடிஞ்சு போச்சுல அப்படி சொல்லக்கூடாது என சொல்ல தெரியாம சொல்லிட்டேன், முழுசா அவர் கிட்ட சொல்றதுக்குள்ள அவர் வந்துட்டாரு என சொல்ல செல்வி இந்த விஷயத்தை பாக்யாவிடம் சொல்ல பாக்கியா கோபமாக கிளம்பி வருகிறார்.

பழனிச்சாமியிடம் பாக்கியா மன்னிப்பு கேட்க அவர் அதெல்லாம் ஒன்னும் இல்ல மேடம் நீங்க ப்ரீயா விடுங்க என சொல்லி சமாளித்து கூட்டிட்டு போய் உட்கார வைத்து சுதாகரை பாட்டு பாட சொல்கிறார். கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து கிளம்பி விடும் பாக்யா கோபியை தேடி அலைய செல்வி அவரை சும்மா விடக்கூடாது என ஏத்தி விட மறுபக்கம் கோபி ராதிகாவிடம் சத்தம் போட்டுவிட்டு வெளியே வருகிறார்.

இன்னைக்கு எனக்கு இருக்க கோவத்துல அவரை சும்மா விடமாட்டேன், துப்பாக்கி இருந்தா சுட்டு தள்ளிடுவேன் என பாக்கியா செல்வியிடம் ஆவேச பட கோபி பாக்கியம் முன்னாடி ஏய் பாக்கியலட்சுமி என வந்து நிற்க பாக்கியா ஏய் என ஆவேசமாக சத்தம் போட கோபி அதிர்ந்து போய் நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.