ஜோதிகா ஸ்டைலில் திருமணம், குழந்தைக்கு பிறகு திரையுலகில் என்ட்ரி கொடுக்க உள்ளார் பிரபல நடிகை.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வருபவர்கள் பலர் இருந்து வருகின்றனர். பொதுவாக சினிமாவில் நாயகிகளாக இருக்கும் நடிகைகள் திருமணத்திற்கு பிறகு அவர்களது மார்க்கெட் அப்படியே அடியோடு படித்து விடும். ஆனால் அந்த நிலை தற்போது மாறி வருகிறது.
நயன்தாரா, சமந்தா போன்ற நடிகைகள் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நல்ல மார்க்கெட் உள்ள நடிகைகளாக இருந்து வருகின்றனர். நடிகை ஜோதிகா சூர்யா பச்சைக்கொடி காட்டியதன் காரணமாக நல்ல நல்ல கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நாயகியாக நடித்து வருகிறார்.
அதே பாணியில் தற்போது வேறு ஒரு முன்னணி நடிகை மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். ஆமாம் நடிகை அசின் 10 வருடங்களுக்கு முன்னர் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் பாலிவுட் சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்தார்.
திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து குடும்பம், குழந்தை என இருந்து வரும் அசின் தற்போது மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார். இதற்காக பல இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வெகுவிரைவில் அசினை வெள்ளி திரையில் பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.