அரண்மனை திரைப்படத்தின் 4 ஆம் பாகம் உருவாகி வருவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தற்போது உறுதியாகி உள்ளது.

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் ஹாரர் திரைப்படமாக வெளியான அரண்மனை திரைப்படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் 4 ஆம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த கூட்டணியில் சுந்தர்சியுடன் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில், நேற்றைய தினம் இயக்குனர் சுந்தர் சி, சந்தானம் இருவரும் ஒன்றாக சேர்ந்து தங்களது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டிருக்கிறார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இதன் மூலம் அரண்மனை 4 திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், சந்தானமும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.