கே ஜி எப் படத்தின் மூன்றாம் பாகம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
Announcement of KGF 3 Movie : கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தை பிரஷாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்தின் முதல் கட்டப் பணிகள் தொடங்கி விட்டதாக தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார். இதனால் கேஜிஎஃப் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பிரஷாந்த் நீல் இயக்கி வரும் சலார் மற்றும் ஜூனியர் என்டிஆர் படங்களின் வேலைகள் முடிவடைந்த பிறகு தான் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.