ஜெயிலர் படத்தின் பாடல் குறித்து அனிருத் பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவிற்கு விக்னேஷ் சிவன் ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அனிருத் இசையமைப்பில் இடம்பெற்று இருக்கும் இப்படத்தின் பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வரும் நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “ரத்தமாரே” என்னும் பாடல் நேற்றைய தினம் வெளியானது.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் “இதயத்தில் இருந்து நேராக வந்திருக்கிறது” என்று குறிப்பிட்டு ட்விட் செய்துள்ளார். அதற்கு இப்பாடலின் வரிகளை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் “இந்தப்பாடலை எழுதியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக எழுதிய எனது முதல் பாடல் அத்துடன் என் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட எனது முதல் பாடலும் கூட,”. என்று குறிப்பிட்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்து அனிருத்தின் பதிவிற்கு ரீ-ட்விட் செய்துள்ளார். இவர்களது இந்த பதிவுகளை கண்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.