ரஜினி திரைப்படத்தில் இசையமைப்பதற்கு லைக்கா நிறுவனத்திடம் அனிருத் சம்பளத்தை உயர்த்தி கேட்டிருக்கிறார்.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்போது வரை படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி அடுத்தபடியாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களுக்கும் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அனிருத்தையே இசையமைப்பாளராக வைக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அனிருத்திடம் அந்நிறுவனம் பேசியபோது, அவர் சம்பளத்தை உயர்த்தி விட்டேன் எனக்கூறி இரண்டு படங்களுக்கும் சேர்த்து 10₹ கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதனைக் கேட்ட அந்நிறுவனத்தின் தயாரிப்பு குழு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.