தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ‘அந்நியன்’ பாட்டுப் பாடி மகிழ்ந்த விக்ரம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சீயான் விக்ரம், தனது எதார்த்தமான குணத்தாலும், ரசிகர்களிடம் காட்டும் அன்பாலும் எப்போதும் தனித்து நிற்பவர். தற்போது அதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் விக்ரம். மூணாரில் சர்ப்ரைஸ் விசிட்! நடிகர் விக்ரம் அண்மையில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை அவர் எதிர்பாராத விதமாக நேரில் சந்தித்துப் பேசினார். […]