பகல்காம் தாக்குதல்: தவறாகப் புரிந்து கொண்டவர்களுக்கு, விஜய் ஆண்டனி மீண்டும் அறிக்கை
‘தனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என விஜய் ஆண்டனி மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. காஷ்மீர், பகல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பகல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் […]