சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய கருத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான புரிதல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் நான் கூறிய கருத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள தவறான புரிதலை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எப்போதும் எனது ரசிகர்களையும் பொதுமக்களையும் என் தாய்க்கு நிகராக மதித்து வந்துள்ளேன். ஆனால், நான் மக்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி […]