Browsing tag

politics

சிபிஐ அலுவலகத்தில் இன்று விஜய்யிடம் 2-ம் கட்ட விசாரணை..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவிருந்த ஜனநாயகன் படம், ரிலீஸ் தொடர்பாக நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் 2-வது முறையாக விசாரணைக்கு ஆஜராவதற்காக நடிகரும் தவெக தலைவருமான விஜய்யிடம் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27-ந்தேதி விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். […]

எல்லாவற்றையும் அரசியலாக்க முடியாது: ‘ஜனநாயகன்’ பற்றி சரத்குமார் பேச்சு..

விஜய் கடைசிப்படமாக நடித்து ஹெச்.வினோத் இயக்கிய ஜனநாயகன் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் சில திருத்தங்களை சொன்னார்கள். அவர்கள் சொன்ன திருத்தங்களை செய்த பிறகும் சென்சார் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இதன் காரணமாக கேவிஎன் நிறுவனம் நீதிமன்றம் சென்றது. தனி நீதிபதி படத்துக்கு சாதகமான தீர்ப்பு வழங்க, மத்திய தணிக்கை குழு வாரியம் செய்த மேல்முறையீட்டில் பாதகமான தீர்ப்பு வந்தது. தற்போது இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. முன்னதாக, ஜனநாயகன் படம் ஜனவரி 9-ந்தேதியும் பராசக்தி […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் பிரச்சினைக்கு வாக்காளர்கள்தான் காரணம்: நடிகர் ஜேசன் கருத்து..

விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ம்தேதி ரிலீஸாகும் என்று அறிவித்த நிலையில் அதற்கு யு/ஏ 16+ சான்று கொடுத்து சில காட்சிகளை நீக்குமாறு தெரிவித்தது சென்சார் போர்டு. பின்னர் அந்த படத்தில் இருக்கும் சில காட்சிகள் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருக்கிறது என சான்று கொடுப்பதை நிறுத்தியது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு தரப்பு. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷாவோ ஜனநாயகன் […]

எதிர்மறையாய் விமர்சிக்காதீர்கள்: ‘பராசக்தி’ படக்குழு காட்டம்..

‘இது போட்டி அல்ல’ என பராசக்தி படத்தின் க்ரியேட்டிவ் புரொடியூசர் கூறியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் 9-தேதியும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் 10-ந்தேதியும் வெளியாவதாக இருந்தன. இதில் தணிக்கை அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டப்படி ‘பராசக்தி’ வெளியானது. ’ஜனநாயகன்’ வெளியாகாததை முன்வைத்து, ‘பராசக்தி’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்கள் பரப்புவதாக கூறப்படுகிறது. […]

‘ஜனநாயகன்’ பட தீர்ப்பை எதிர்த்து, சென்சார் போர்டு மேல்முறையீடு..

ஜனநாயகன் பட ரிலீஸ் விவகாரம் பற்றிக் காண்போம்.. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமான, கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின், படத்தை ஆய்வு செய்த குழு உறுப்பினர், புகார் அளித்துள்ளது பிந்தைய சிந்தனை. இதுபோன்ற புகாரை ஏற்றுக் கொண்டால் அது அபாயகரமானதாகி விடும். ஏற்கெனவே படத்தை பார்த்து, […]

‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் விவகாரம்; மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை: தமிழிசை பதிலடி..

‘அவசரநிலை பிரகடனத்தின்போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ‘ஜனநாயகம்’ திரைப்படத்துக்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடியாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த உலகமே மதிக்கும் மிகப் பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்புக்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர்தான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் ‘ஜனநாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பாரத […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் விவகாரம்: தணிக்கை வாரியம் ஐகோர்ட்டில் சொன்ன தகவல்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9-ந்தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இதுவரை ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்துக்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ந்தேதி படத்தை பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கை […]

விஜய்யின் முழு நேர அரசியல் ஈடுபாடு குறித்து, குஷ்பூ கருத்து..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 9-ந்தேதி வெளியாகிறது. இப்படம்தான் எனது கடைசிப் படம் என எப்போது அவர் தவெக கட்சி துவங்கினாரோ அன்றே அறிவித்துவிட்டார். பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்காக, விஜய் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. திரைப்ப பிரபலங்களும் விஜய்யின் இந்த முடிவை கேட்டு சற்று அதிர்ச்சியானார்கள். அவ்வகையில் நடிகை குஷ்பூவும் விஜய்யின் இந்த முடிவு […]

தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், நீதிமன்றத்தை நாட ஜனநாயகன் படக்குழு முடிவு..

விஜய் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. ஆனால், இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு சில காட்சிகளை நீக்கக் கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, படக்குழு அந்த காட்சிகளை நீக்கி மறு தணிக்கைக்கு அனுப்பியது. ‘ஜனநாயகன்’ வரும் 9-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை […]

விஜய் அரசியலுக்கு வர யார் காரணம்?: வைரலாகும் நிகழ்வு..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வரும் 9-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை பற்றி மன்சூர் அலிகான் கூறியதாவது, ‘முதலில் நானும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால், அதன் பிறகே அவர் யாரால் அரசியலில் இறக்கி விடப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தது. எம்.ஜி.ஆர். போன்று மக்கள் போராட்டம் செய்து அவர் அரசியலுக்கு வந்திருந்தார் என்றால் நாடே அவருடன் நிற்கும். ஆனால், […]