திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ், மிஷ்கினுடன் இணையும் புதிய படம்..
தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். காதல் திருமணத்திற்கு பிறகு தற்போது, இவர் அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில், இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த புதிய படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. […]