Browsing tag

Ilayaraaja

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க, ஐகோர்ட் உத்தரவு..

இசைஞானி இளையராஜாவின் திரைப்பாடல்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை. எந்தக் காற்றிலும் கலைந்து போகாதவை என்பது தெரிந்ததே. அவ்வகையில், இளையராஜா தனது பாடல்களுக்கான காப்புரிமைக்காக வழக்கும் தொடர்ந்து வருகின்றார். இது தொடர்பான நிகழ்வு பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மாதீஸ்வரன் இயக்கிய ‘டியூட்’ திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ ஆகிய பாடல்களை […]

நான் காப்புரிமை கேட்பதில்லை: இசையமைப்பாளர் தேவா பேச்சு..

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், அவர் இசையமைக்காத சில படங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக இளையராஜா சார்பில் வழக்கும் தொடுக்கப்படுகிறது. அவ்வகையில் பலவாறு விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா தெரிவிக்கையில், ‘நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அந்த அப்பா அந்த சிறுவனிடம், ‘உனக்கு பிடித்த ‘கரு கரு கருப்பாயி’ […]

தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் என்ன ஆயிற்று?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கடந்தாண்டு இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தனுஷ் கமிட்டாகியிருந்தார். அப்படத்தை அருண் மாதீஸ்வரன் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இப்படத்தின் அறிவிப்பை கமல் மற்றும் பாரதிராஜா முன்னிலையில் படக்குழு வெளியிட்டது. அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆனபோதும் இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மும்பை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இளையராஜா பயோபிக் துவங்காமல் இருப்பதாக சில செய்திகள் வந்தன. மேலும், இளையராஜா பயோபிக்கை தயாரிப்பதற்காக வேறு தயாரிப்பாளர்களை தனுஷ் தேடி […]

கோவையில் இசை நிகழ்ச்சி: இளையராஜா முக்கிய அறிவிப்பு..

கோவையில் நடைபெறவிருக்கும் இசைக் கச்சேரி பற்றி, இளையராஜா அறிவித்துள்ள தகவல் காண்போம்.. இசைஞானி இளையராஜா தனது சிம்பொனி இசையை லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் நிகழ்த்தினார். சுமார் 20 நிமிடங்கள்வரை நிகழ்ந்த தொடர் இசைத்தொகுப்பான சிம்பொனியை அனைவரும் கொண்டாடினர் இந்தியாவிலிருந்து சிம்பொனி அரங்கேற்றிய முதல் நபர் என்ற பெருமையையும் ராஜா பெற்றார். சிம்பொனிக்கு பிறகான தனது முதல் இசை கான்செர்ட்டை கரூரில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். அந்த கச்சேரிக்கு மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் விவகாரம்: தயாரிப்பாளர் விளக்கம்

இளையராஜாவின் பாடல்கள் குட் பேட் ‘அக்லி’ படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது தொடர்பாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ள விளக்கம் காண்போம்.. அஜித் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று, வசூலிலும் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன், ‘இளமை இதோ இதோ, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் […]

8-ந்தேதி சிம்பொனி அரங்கேற்றம்: இளையராஜாவை நேரில் சந்தித்து முதல்வர் வாழ்த்து

இசைஞானியை இன்று முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் பார்ப்போம்.. தமிழ்த்திரை உலகுக்கு காலம் வழங்கிய கொடையாக வந்தவர் ‘இசைஞானி’ இளையராஜா. இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3, ஆனால், அவர் அதே தினத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றிக்கொண்டார். காரணம், ஜுன் 3-ம் தேதி அனைவரும் ஒருவருக்குத்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தார். மேலும், இளையராஜாவுக்கு பலரும் […]