Browsing tag

Ilaiyaraaja

இளையராஜாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்!

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது 10வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இது அவரின் 1540வது படம் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் பின்னணி இசை தனி […]

ஓடிடியில் வெளியாகிறது ‘மூன்றாம் பிறை’

டிஜிட்டலில் மீண்டும் ‘மூன்றாம் பிறை’ – மே 1 முதல் OTT-யில் வெளியீடு! தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத கிளாசிக் படைப்பான மூன்றாம் பிறை, டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட வடிவில் வரும் மே 1, 2026 முதல் Amazon Prime Video தளத்தில் வெளியாகிறது. 1982ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் கவிதைநயம் மிக்க காட்சியமைப்பால் ரசிகர்களின் மனதில் இன்று வரை நிலைத்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. ஜி. தியாகராஜன், ஜி. சரவணன் இணைந்து தயாரித்த […]

மே.30-ந்தேதி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி..

மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம் தந்த கொடை ‘இசைச் சித்தர்’ இளையராஜா. இசை சாம்ராஜ்யம் இளை​ய​ராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்​பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி​யின் நேரடி நிகழ்ச்​சியை லண்​டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்​தி​னார். ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் நடத்​திய இந்த சிம்​பொனி இசை நிகழ்ச்சிக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்​தது. இதன் மூலம், ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனி எழுதி அதை அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் […]

இளையராஜாவின் பயோபிக்; தனுஷ் நடிக்கும் படம் எப்போது உருவாகும்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்க விரும்புவதாக ஷங்கர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பயோபிக் எப்போது தொடங்கும் என்பது இன்றும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. இசைஞானி இளை​ய​ராஜா​வின் வாழ்க்கை கதை, திரைப்​பட​மாகிறது. இப்​படத்​துக்​கான தொடக்க விழா கடந்த 2024-ம் ஆண்டு சென்​னை​யில் நடந்​தது. கமல்​ஹாசன் உள்​ளிட்ட பிரபலங்​கள் இதில் கலந்து கொண்டனர். இளை​ய​ராஜா​வாக தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்​வரன் இயக்​கு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. தொடக்க விழாவுக்​குப் பிறகு […]

இசைஞானி இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது..

இசைஞானி இளையராஜா லண்டனில் ‘சிம்பொனி’ இசைச்தொகுப்பை அரங்கேற்றி இசையுலக கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-வது பட விழா, ஜனவரி 28-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை நடை​பெற உள்​ளது. 8 நாட்​கள் நடை​பெறும் இப்பட விழா​வில் சுமார் 70 திரைப் படங்​கள் திரை​யிடப்​படு​கின்​றன. இவ்​விழா​வில் இசைஞானி இளையராஜாவுக்கு ‘பத்ம​பாணி’ விருது வழங்​கப்பட இருக்​கிறது. இதை விழா ஏற்​பாட்​டாளர்​கள் […]

‘குட் பேக் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் வழக்கு, கோர்ட் முடித்து வைப்பு..

அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் ஆதிக் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில், தன் அனுமதியில்லாமல், ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது சென்னை உயர் நீதிமன்றம்.’ விசாரணையில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. […]

‘குட் பேக் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் குறித்த வழக்கு: ஜகோர்ட் உத்தரவு..

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். ‘குட் பேக் அக்லி பட’த்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், இளையராஜா […]

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த கோர்ட் தடை..

யூ டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டம், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைதளங்களில் ஏற்கெனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் […]

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்கள்: வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி..

பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான ‘டியூட்’ படத்​தில் இளையராஜா​வின் பாடல்​களை அனுமதியின்றி பயன்​படுத்​தி​யிருப்​பது தொடர்​பாக, தனி​யாக வழக்கு தொடரலாம் என இளை​ய​ராஜாவுக்கு உயர் நீதி​மன்​றம் அனு​ம​தி​ அளித்துள்​ளது. பதிப்​புரிமை பெற்ற தனது பாடல்​களைப் பயன்​படுத்தி தனிப்​பட்ட முறை​யில் அதிக வரு​வாய் ஈட்டி வரு​வ​தாகக் கூறி சோனி மியூசிக், எக்கோ ரெக்​கார்​டிங், அமெரிக்​கா​வில் உள்ள ஓரியண்​டல் ரெக்​கார்ட்ஸ் ஆகிய நிறு​வனங்​களுக்கு எதி​ராக இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை ஏற்கனவே விசா​ரித்த உயர் […]