Browsing tag

director rajamouli

முதல் இந்திய திரைப்படம்; ராஜமௌலியின் ‘வாரணாசி’ புதிய சாதனை..

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் இந்தியாவுடன் சேர்ந்து கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளில் படமாக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் அண்டார்டிகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் அண்டார்டிகாவில் படமாக்கப்படும் முதல் இந்திய படம் என்ற புதிய சாதனையை […]

ராஜமவுலியின் ‘வாரணாசி’ படப்பாடல்கள்: இசையமைப்பாளர் அப்டேட்ஸ்..

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். ஆகிய பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த ராஜமவுலியின் இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகும் இப்படத்தில், பிருத்விராஜ் சுகுமாறன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி படம் குறித்து தெரிவிக்கையில், ‘ரசிகர்கள் பிரமாண்டத்தை […]

ராஜமவுலியின் சர்ச்சை பேச்சுக்கு, ராம் கோபால் வர்மா ஆதரவு..

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, தற்போது ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணியில் ‘வாரணாசி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு நிகழ்வில் ராஜமவுலி பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தின் பெயர்-டீசரை அகண்ட திரையில் வெளியிட முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், குழப்பங்கள் எழுந்ததும் மேடையில் ஏறிய ராஜமவுலி, ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், […]

ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ படத்தலைப்புக்கு நேர்ந்த சிக்கல்..

இந்திய அளவில் புகழ்பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு தற்போது‘வாரணாசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு அண்மையில் ‘குளோப்டிரோட்டர்’ என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது. இதனையடுத்து, இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிகழ்வில், அனுமன் குறித்து ராஜமவுலி பேசியது சர்ச்சையாகி, அவர் மீது ஹைதராபாத் காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில், தற்போது ‘வாரணாசி’ படத்துக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. இந்த தலைப்பை […]

இயக்குநர் ராஜமவுலி மீது, இந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார்..

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநரான ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ படத்துக்காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது. இந்த நிகழ்வில் பேசிய ராஜமவுலி, ‘எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் […]

ராமர் கெட்அப்பில் மகேஷ்பாபுவை பார்த்து வியந்துபோனேன்: ராஜமவுலி வாய்ஸ்..

‘பாகுபலி’ ஆர்.ஆர்.ஆர். படங்களின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி என்பது தெரிந்ததே. தற்போது மகேஷ்பாபுவுடன் இணைந்து உருவாகும்’ படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில், காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். ‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா, ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகின்றனர். […]

ராஜமவுலி இயக்கும் படத்தில், பிரியங்கா சோப்ராவின் லுக் வெளியீடு..

இந்திய அளவில் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் அறிமுக விழா ஹைதராபாத்தில் விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தில், நாயகியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ராவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அவர் மண்டாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீண்ட வருடங்கள் கழித்து இந்திய படங்களுக்கு பிரியங்கா சோப்ரா திரும்பியிருப்பதால், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழாவுக்காக […]

ராஜமவுலி-மகேஷ்பாபு இணைந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, எப்போது தெரியுமா?

ராஜமவுலி இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் வரவேற்பு பெற்று வருவது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது அவரது இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை எக்ஸ் தள உரையாடல் மூலம் தொடங்கியிருக்கிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாராகி வரும் பெரும் பொருட்செலவைக் கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பெயர், மகேஷ் பாபு உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எதையுமே படக்குழு […]

ராஜமவுலி இயக்கும் படத்திற்காக, ரூ.50 கோடியில் வாரணாசி செட்

இந்திய அளவில் கவனம் ஈர்த்த ராஜமவுலியின் அடுத்த பட அப்டேட் பார்ப்போம்.. ‘ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மாதவனும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி, இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் வாரணாசியில் நடப்பது போல அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமுள்ள அங்கு படமாக்கப்பட முடியாது என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்க உள்ளனர். […]

கதை-கலாச்சாரத்தில், எந்த நாடும் இந்தியாவை நெருங்கவில்லை: ராஜமவுலி பெருமிதம்..

‘கதை சொல்லுதலில் இந்தியாவின் டிஎன்ஏ-வை உலகில் எந்த நாடும் நெருங்கவில்லை’ என இயக்குனர் ராஜமவுலி பெருமையுடன் பேசிய நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிய நிகழ்வு பார்ப்போம்.. உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு “வேவ்ஸ்” உச்சி மாநாடு மும்பையில் தொடங்கியது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை நடத்தும் இந்த மாநாடு வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், படைப்பாளர்கள் கலந்துகொண்டு […]