சொந்த செலவில் 25க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கலையரங்கம் வகுப்பறைகள் கட்டி அசத்திய பிடி செல்வகுமாருக்கு பாராட்டு விழா..!
பிடி செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளனர். இந்திய திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் அவர்கள் கலப்பை மக்கள் இயக்க தலைவர், தென்குமரி கல்விக்கழக செயலாளராகவும் இருந்து வருகிறார். இதுவரை இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு கலையரங்கங்கள், வகுப்பறைகள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் கலையரங்கங்களை தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகம் மட்டுமின்றி, தமிழகத்தில் […]