Browsing tag

சிரஞ்சீவி

சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த படம் வசூலில் புதிய சாதனை..

தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தில் நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து உருவான இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஜனவரி 12-ந்தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 5 நாளில் அதிகம் வசூலித்த முதல் திரைப்படமாக புதிய சாதனை படைத்துள்ளது. வெளியான 5 நாட்களில் இப்படம் ரூ.226 கோடிக்கும் அதிகமாக […]

நயன்தாரா சொன்ன வார்த்தையால், மயங்கி விழுந்த இயக்குநர்..

தெலுங்கு திரையில் ‘பகவந்த் கேசரி’ படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தற்போது ‘மன வரசங்கரபிரசாத் காரு’ பட ரிலீஸ் வேலையில் உள்ளார். சிரஞ்சீவி, நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வெங்கடேஷ். சங்கராந்தி ஸ்பெஷலாக ஜனவரி 12-ந்தேதி வரும் இப்படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். படங்களில் நடிப்பதோடு சரி, அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார் நயன்தாரா. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே நான் ப்ரொமோஷன்களுக்கு வர மாட்டேன் சார் என […]

எனது குடும்பத்தில் டிஜிட்டல் கைது நடந்துள்ளது: நாகார்ஜுனா பரபரப்பு பேச்சு..

ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் ஸ்டைலிஸ்ட் வில்லனாக நாகார்ஜுனா நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், தற்போது ஐதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தலைமையில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, எஸ்.எஸ். ராஜமவுலி, தில் ராஜு, சுரேஷ்பாபு போன்ற பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், பேசிய நாகார்ஜுனா, ‘தனது குடும்பத்தில் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு 2 நாட்கள் டிஜிட்டல் கைதுக்கு ஆளானதாக கூறினார். காவல்துறையினரை அணுகினால் பிரச்சினை […]

சிரஞ்சீவியுடன் கார்த்தி இணையும் படத்தின் அப்டேட்ஸ்..

கார்த்தி தற்போது ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2’ படத்தில் இணைகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ‘டாக்கு மஹாராஜ்’ படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி. இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சிரஞ்சீவி – பாபி இருவரும் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் இணைந்து பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அனில் ரவிப்புடி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் […]

சிரஞ்சீவியின் புகைப்படம், குரலை பயன்படுத்த கோர்ட் தடை..

இணைய தளங்களில் தங்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, திரைப் பிரபலங்கள் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ஆஷா போன்ஸ்லே உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவியும் ஐதராபாத், சிட்டி சிவில் நீதிமன்றத்தில், தனது அடையாளம் மற்றும் புகழை, அதிகாரப் பூர்வமின்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதற்குத் தடை […]

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

ஆசியக் கோப்பையில் புரிந்த சாதனைகளுக்காக, “மன சங்கர வர பிரசாத் காரு” படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு பாராட்டு விழா! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் “மன சங்கர வர பிரசாத் காரு”, இயக்குநர் அநில் ரவிபுடி இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், சிரஞ்சீவி தனது படப்பிடிப்பிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இந்தியாவின் இளம் கிரிக்கெட் சென்சேஷனான திலக் வர்மாவை சந்தித்து அவரைக் கௌரவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் […]

திரிஷா, சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்குகிறாரா?: வைரலாகும் தகவல்கள்..

செம பிஸியில் ஜொலிக்கும் நடிகை திரிஷா, விரைவில் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. இது பற்றிய விவரம் காண்போம்.. நடிகை திரிஷா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும், சூர்யாவின் 45-வது படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ள ‘மாசாணி அம்மன்’ படத்திலும் திரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ படத்தில் திரிஷா நடித்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், சினிமாவை நடிப்பிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. திரிஷாவுக்கு சினிமாவில் நடித்து மிகவும் […]

அல்லு அர்ஜுனை மட்டும், குற்றம் சாட்டுவது நியாயமானது அல்ல: துணை முதல்வர் பவன் கல்யாண்..

திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் பலியானது தொடர்பாக, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியது பற்றிக் காண்போம்.. ‘அல்லு அர்ஜுன் திரையரங்கம் சென்றதால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது’ என தெலங்கானா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முதல்முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண். அவர் கூறியதாவது: ‘தேவையின்றி ஒரு பிரச்சினை சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ளது. அரசியலில் அடிப்படையில் […]

‘என் மகன் இறந்து விட்டான்’: திரிஷாவின் கண்ணீர் பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல்..

சினியுலகில், ‘தென்னிந்திய தேவதை’ திரிஷா, கண்ணீருடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இது குறித்து கரிசன உணர்வோடு காண்போம். தமிழ் சினிமாவில் 41 வயதிலும் டீன் ஏஜ் பொண்ணு போல திரிஷா இருக்கிறார். ஆதலால், படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. தற்போது ‘சூர்யா 45’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இதுதவிர, அஜித்துக்கு ஜோடியாக ‘குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் […]