போர் நிறுத்தம் பற்றி சல்மான்கான் பதிவு: நெட்டிசன்ஸ் சரமாரி கேள்வி..
ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்றிரவு மீண்டும் போர் தொடுத்துள்ளது. இதற்கிடையே சல்மான்கான் பதிவு செய்து நீக்கிய தகவல் காண்போம்.. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து சல்மான்கான் டுவிட் செய்து பின்னர் நீக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நேரத்தில் அவர் மௌனம் சாதித்தது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். போர் நிறுத்தம் குறித்த அவரது பதிவு வைரலாகி, பலவிதமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன், சல்மான்கான் தனது மகிழ்ச்சியை வலைதளத்தில் பதிவிட்டார். […]