Browsing tag

அமலாக்கத்துறை

காலை முதல் இரவு வரை நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை..

ஸ்ரீகாந்த்-ஷாம் ஆகியோர் இணைந்து நடித்த ‘தி டிரெய்னர்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், […]

மம்முட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை; ஆவணங்கள் பறிமுதல்..

பிரேமலு, நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘லோகா’ திரைப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் தயாரித்த இப்படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இந்நிலையில், பூடானில் இருந்து சொகுசு கார்​கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்​பாக சென்​னை​யில் துல்​கர் சல்​மான், அவரது தந்தை மம்​முட்​டி​யின் வீடு, அலு​வல​கம் உட்பட தமிழகம், கேரளா​வில் மொத்​தம் 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரி​கள் சோதனை நடத்​தி​யுள்​ளனர். இந்​நிலை​யில், துல்​கர் சல்​மான் […]

நடிகை ரன்யாவுக்கு, மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு..

நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தியதற்காக அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அவர் வெளிநாட்டுச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதம், ரன்யா ராவ் துபாயிலிருந்து பெங்களூரு வந்தபோது, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 14.2 […]

பிரபல நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக, அமலாக்கத்துறை நாடு முழுவதும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், தமிழகத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பல இடங்களில் கடந்த சில வருடங்களாக பல சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அடுத்ததாக, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திலும் சோதனையானது நடத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் விசாகனிடம் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் […]

பிரபல சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அமலாத்துறை சோதனை

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், சினிமா துறையில் தனது பயணத்தை உதவி இயக்குனராக தொடங்கியவர். தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விக்னேஷ் சிவனுக்கு உதவியாளராக பணியாற்றியதில் இருந்து அவரது திரைப்பயணம் தொடங்கியது. பின்னர், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘பாவ கதைகள்’, ‘அமரன்’ போன்ற படங்களில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றினார். தற்போது ‘டான் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் […]

27-ந்தேதி ஆஜராக வேண்டும்: மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

மகேஷ்பாபு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், மகேஷ் பாபுவுக்கு சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா குழும வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மாதம் 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா நிறுவனங்களின் விளம்பர தூதராக உள்ளார் மகேஷ் பாபு. சூர்யா […]

‘எம்புரான்’ பட தயாரிப்பாளரை தொடர்ந்து, பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

‘எம்புரான்’ பட சர்ச்சை, 24 காட்சிகள் நீக்கம் இதனைத் தொடர்ந்து நிகழும் தகவல்கள்… நடிகர் பிருத்விராஜ் இயக்கிய மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ திரைப்படம், ரூ.200 கோடியை கடந்து வசூலித்துள்ளது. அதேபோல் மிக குறுகிய காலத்தில், அதிக வசூலை ஈட்டிய மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. படத்தின் சில காட்சிகள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதற்காக மோகன்லால் மன்னிப்பு கோரியது மட்டுமின்றி, படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, 24 […]

‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ‘ரெய்டு’

‘எம்புரான்’ பட சர்ச்சையை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் பிருத்விராஜ் இயக்கி, மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கிடையே இப்படம் சர்ச்சைகளிலும் சிக்கி, மறு எடிட்டிங்கிற்காக அனுப்பப்பட்டு படத்தில் 24 மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த புதிய பதிப்பு திரையரங்குகளில் வெளியானது. எடிட்டிங்கிற்குப் பிறகு, படத்தின் ஆன்லைன் முன்பதிவில் சரிவு ஏற்பட்டாலும், அது […]

அமலாக்கத்துறையின் நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம்: இயக்குனர் ஷங்கர் வருத்தம்

‘எந்திரன்’ படம் தொடர்பாக எடுத்துள்ள அமலாக்கத்துறையின் நடிவடிக்கை பற்றி இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. ‘எந்திரன்’ திரைப்படம் தான் எழுதிய ஜுகிபா என்கிற கதையை திருடி எடுக்கப்பட்டதாக ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜுகிபாவுக்கும் ‘எந்திரன்’ படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதாக நீதிமன்றமே தெரிவித்ததால் அதை எதிர்த்து ஷங்கர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை காரணம் […]