காலை முதல் இரவு வரை நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை..
ஸ்ரீகாந்த்-ஷாம் ஆகியோர் இணைந்து நடித்த ‘தி டிரெய்னர்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், […]