Amma Samadhi Marina Beach
Amma Samadhi Marina Beach

Amma Samadhi Marina Beach – சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22- ஆம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா அவர்கள், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5- ஆம் தேதி இரவு மரணம் அடைந்தார்.

ஜெயலலிதா மறைந்து இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதையொட்டி இன்று அவரது சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் 2- ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதனால் இன்று காலை முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் அதிமுக சார்பில் அமைதிப்பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுகவினரை போன்று, அமமுக சார்பிலும் அமைதிப்பேரணி நடத்தப்படும் என டிடிவி தினகரன் கூறியுள்ளதால் மெரினா காமராஜர் சாலை முழுவதிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.