ஷாலினி அஜித் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு உலா வருவதாக அஜித்தின் மேனேஜர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Ajith Shalini Twitter Account Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட ஷாலினி குடும்பத்தை கவனிப்பதில் மட்டுமே நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவருடைய பெயரில் சமூக வலைதள பக்கம் என டுவிட்டரில் போலி கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஷாலினி உண்மையான கணக்கு என நினைத்து எக்கச்சக்கமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பின்தொடர்ந்து வருகின்றனர்.
இதனால் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அது போலி கணக்கு அதை யாரும் நம்ப வேண்டாம். ஷாலினி அஜித்குமார் ட்விட்டர் பக்கத்தில் இல்லை, அந்தக் கணக்கை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அந்த கணக்கை ரிப்போர்ட் செய்து வருகின்றனர்.