ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடியாக அஜித் ஒரு கோடி ரூபாய் செலவில் உதவி செய்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மூன்று மற்றும் நான்காம் தேதியில் பெய்த கனமழையால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மீட்பு பணிகளால் தற்போது சென்னை மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது.
இருந்த போதிலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் ஒரு வாரம் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி இருந்தனர். அந்த சமயத்தில் அஜித் தன்னுடைய வீட்டை திறந்து நூறு குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு இந்த 100 குடும்பம் ஆயிரம் குடும்பங்கள் ஆனது. கடைசியாக அவர்கள் வீட்டுக்கு கிளம்பும்போது ஒவ்வொரு ரூபாய்க்கும் பத்தாயிரம் ரூபாய் என ஒரு கோடி ரூபாய் வரை அஜித் செலவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் அஜித் வீட்டில் தங்கியிருக்கும் போது மூன்று வேலையும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். இப்படி அஜித் செய்த இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.