விஜய் செய்ததை 19 வருடத்திற்கு முன்பே அஜித் செய்து காட்டியதாக ரசிகர்கள் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றன.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத டாப் ஹீரோக்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படம் தொடர்பான தகவல்களுக்காக ரசிகர்கள் எப்போதும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை நேரில் அழைத்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி நடிகர் விஜய் கௌரவித்திருந்ததை குறிப்பிட்டு அதனை 19 ஆண்டுகளுக்கு முன்பே அஜித் செய்து விட்டதாக கூறி அவரது ரசிகர்கள் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

அதாவது, கடந்த 2004 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் 1000 மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை நேரில் அழைத்து அஜித் அவர்களை கௌரவ படுத்தியுள்ளார். தற்போது அதன் புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் அஜித் ரசிகர்கள் விஜய் தற்போது செய்ததை 19 ஆண்டுகளுக்கும் முன்பே அஜித் செய்துவிட்டதாக குறிப்பிட்டு அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.